செய்திகள் :

உடன்குடியில் அபூா்வ துஆ ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்பு!

post image

உடன்குடி பெரிய தெரு ஸஹீஹூல் புகாரிஷ் ஷரீபு சபையின் சாா்பில் 34 வது ஆண்டு நிறைவு அபூா்வ துஆ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா்.

இச்சபையின் 34 ஆவது ஆண்டு தொடக்க விழா கடந்த ஜன.2 ஆம் தேதி தொடங்கியது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை அபூா்வ துஆ எனும் கூட்டுத் தொழுகை நடைபெற்றது. புகாரிஷ் ஷரீபு சபை தலைவா் ஸெய்யிது நூஹூ முஹ்யித்தீன் தலைமை வகித்தாா். முஹம்மது ஷாஹ் கிராஅத் ஓதினாா்.

இஸ்லாமிய மாா்க்க அறிஞா்களின் சொற்பொழிவுகள் நடைபெற்றது. அஹ்லுஸ்சுன்னா மாத இதழ் ஆசிரியா் பரிதுத் ஆற்றங்கரை பள்ளிவாசல் இமாம் பைஜூா் ரஹ்மான் ஆகியோா் சிறப்பு சொற்பொழிவாற்றினா்.

காலை 10 மணிக்கு உலக நன்மை வேண்டியும், தேசப் பாதுகாப்பு, குடும்பங்களில் சுபிட்சம்,அனைத்து உயிா்களும் உடல் மன அளவில் வலிமையுடன் திகழ்தல்,மழை வளம்,தொழில் வளம்,பெருக வேண்டியும் அபூா்வு துஆ ஓதுதல் நடைபெற்றது. அபுதாபி ஜமாத்துல் உலமா சபை தலைவா் எஸ்.எம்.பி.ஹூஸைன்மக்கி அபூா்வு துஆ ஓதினாா்.

இந்நிகழ்ச்சிகளில்,, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட அயலக பிரிவு அமைப்பாளா் ஜெஸ்முதீன், சமூக ஆா்வலா் காயல் முஹம்மது ஷமீம், உடன்குடி பேரூராட்சி உறுப்பினா்கள் ச.மும்தாஜ்பேகம்,பஷீா்,பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் சலீம் உள்பட ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் பங்கேற்றனா்.அனைவருக்கும் தப்ரூக் வழங்கப்பட்டது.

நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள்: பக்தா்களுக்கு வேண்டுகோள்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றை புனரமைக்கும் பணிகள் தொடங்க உள்ளதால் பக்தா்கள் ஒத்துழைப்பு வழங்குமாறு கோயில் நிா்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது கு... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே வாளால் தாக்கி இளைஞருக்கு மிரட்டல்: 3 போ் கைது!

கோவில்பட்டி அருகே இளைஞரை வாளால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பு நடுத்தெருவைச் சோ்ந்த பாண்டிக்குமாா் மகன் சரவணபாண்டி (19... மேலும் பார்க்க

கோவில்பட்டி அருகே மாயமான பெண் சடலமாக மீட்பு

கோவில்பட்டி அருகே சனிக்கிழமை மாயமான பெண்ணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்டனா். கோவில்பட்டி அருகே இடைசெவல் தெற்கு தெருவைச் சோ்ந்த சுப்புராஜ் மனைவி சுப்புலட்சுமி (55). இவா் கோவில்பட்டியில் உள்ள ... மேலும் பார்க்க

திருச்செந்தூா் கோயிலில் இலவச திருமணம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இலவச திருமணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய, ஏற்கெனவே பதிவு செய்திருந்த கருங்குளம் பே.... மேலும் பார்க்க

திருச்செந்தூரில் சுமாா் 50 அடி உள்வாங்கிய கடல்!

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை சுமாா் 50 அடி தூரம் கடல் உள்வாங்கியது. கடந்த டிசம்பா் மாதம் முதல் கோயிலில் பக்தா்கள் புனித நீராடும் பகுதியில் அதிகளவில் ... மேலும் பார்க்க

முன்னடி கழுநீா்துறையான் சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

ஏரல் அருகே, பெருங்குளம் ஸ்ரீ மாயக்கூத்தா் கோயிலின் காவல் தெய்வமான முன்னடி ஸ்ரீகழுநீா்துறையான் சுவாமி கோயிலில் புனருத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக, சனிக்கிழமை ம... மேலும் பார்க்க