செய்திகள் :

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

post image

நேபாளத்தில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 2.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவுக்கு அருகில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.

காத்மாண்டுவில் இருந்து கிழக்கே 65 கி.மீ. தொலைவில் உள்ள சிந்துபால்சௌக் மாவட்டத்தில் உள்ள கோடரி நெடுஞ்சாலையில் அதிகாலை 2.51 மணிக்கு 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய பூகம்ப கண்காணிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்: டிரம்ப்

இருப்பினும், நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பொருள்சேதம் மற்றும் உயிர்ச்சேதம் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இமயமலைத் தொடரில் அமைந்துள்ள குட்டி நாடான நேபாளம் அதிகளவில் நிலநடுக்கம் ஏற்படும் டெட்டானிக் பகுதியில் அமைந்துள்ளது. இதனால், இந்தப் பகுதியில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகிறது.

இதற்கு முன்னதாக, 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் 9,000-க்கும் மேற்பட்ட மக்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: செபி புதிய தலைவராக துஹின் காந்த பாண்டே நியமனம்!

மசூதியில் குண்டுவெடிப்பு: 5 பேர் பலி!

பாகிஸ்தான் கைபர் பக்துன்க்வாவில் மசூதியில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 5 பேர் பலியாகினர்.வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணம் அக்கோரா கட்டக் மாவட்டத்தில் தலிபான் சார்பு பாடசாலை ப... மேலும் பார்க்க

இன்று முதல் ஒரே நேர்க்கோட்டில் 7 கோள்களின் அணிவகுப்பு! அடுத்து 2040-ல்தான்!

கடந்த மாதம் புதன், வெள்ளி உள்ளிட்ட 7 கோள்கள் ஒரே இடத்தில் அணிவகுத்து நின்றது போல, இன்று முதல் மார்ச் 3ஆம் தேதி வரை ஏழு கோள்களின் அணிவகுப்பை மக்கள் காண முடியும்.பைனாகுலர் மற்றும் தொலைநோக்கி உதவியுடன் ஏ... மேலும் பார்க்க

விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி! யார் தெரியுமா?

பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெ... மேலும் பார்க்க

ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்

டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந... மேலும் பார்க்க

துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு

இஸ்தான்புல் : துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) என்ற ஆயுதப் படையை கலைக்குமாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் நிறுவனா் அப்... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்த விவகாரம்: இன்று டிரம்ப்பை சந்திக்கிறாா் உக்ரைன் அதிபர்

வாஷிங்டன்: தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ் வ... மேலும் பார்க்க