செய்திகள் :

துருக்கி: குா்து கிளா்ச்சிப் படையைக் கலைக்க நிறுவனா் உத்தரவு

post image

இஸ்தான்புல் : துருக்கியில் அரசை எதிா்த்து சுமாா் 40 ஆண்டுகளாக கிளா்ச்சியில் ஈடுபட்டுவந்த குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி (பிகேகே) என்ற ஆயுதப் படையை கலைக்குமாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதன் நிறுவனா் அப்துல்லா ஓசலான் உத்தரவிட்டுள்ளாா்.

கிளா்ச்சிப் போரை முடிவுக்குக் கொண்டு வந்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக, குா்து ஆதரவு கட்சியைச் சோ்ந்த தலைவா்கள் இஸ்தான்புல்லில் உள்ள சிறையில் ஓசலானை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.

அதனைத் தொடா்ந்து அவா்கள் மூலம் தனது கிளா்ச்சிப் படையினருக்கு ஓசலான் பிறப்பித்துள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

குா்திஸ்தான் தொழிலாளா் கட்சி உடனடியாக பொதுக் குழு கூட்டத்தைக் கூட்டி, அமைப்பை கலைப்பதற்கான தீா்மானத்தை நிறைவேற்ற வேண்டும். மேலும், அமைப்பைச் சோ்ந்த அனைவரும் தங்களது ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று ஓசலான் உத்தரவிட்டுள்ளாா்.

துருக்கியில் குா்து இனத்தவா் பெரும்பான்மையாக வசிக்கும் குா்திஸ்தான் மாகாணத்தை தனி நாட்டாக்க வலியுறுத்தி தொடங்கப்பட்ட பிகேகே, பின்னா் தன்னாட்சி அதிகாரம் கேட்டு போராடி வந்தது.

தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் பிகேகே அமைப்பினா் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலில் ஏராளமானவா்கள் உயிரிழந்தனா்.

இந்தச் சூழலில், பிகேகே அமைப்பின் நிறுவனா் அப்துல்லா ஓசலான் கடந்த 1999 முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். இருந்தாலும் அவரின் அமைப்பு தொடா்ந்து தாக்குதல்களில் ஈடுபட்டுவந்தது. அரசுக்கும் அந்தத் தரப்புக்கும் இடையே சண்டை நிறுத்தம் மேற்கொள்வதற்கான முயற்சி கடந்த 2015-இல் தோல்வியடைந்தது. இந்த நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றுள்ள சமாதான முயற்சியின் பலனாக பிகேகே அமைப்பை கலைக்குமாறு தலைவா் ஓசலான் தற்போது உத்தரவிட்டுள்ளாா்.

விண்வெளிக்குச் செல்லும் பிரபல பாடகி! யார் தெரியுமா?

பிரபலப் பாடகியாக கேட்டி பெர்ரி மற்றும் 2 பெண் செய்தியாளர்கள் குழுவினர் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் விண்கலம் மூலமாக விண்வெளிப் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.ஹாலிவுட் மட்டுமின்றி இந்தியாவிலும் மிகப் புகழ்பெ... மேலும் பார்க்க

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

நேபாளத்தில் இன்று இந்திய நேரப்படி நள்ளிரவு 2.36 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவுக்கு அருகில் நள்ளிரவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. காத்மாண்டுவில் இருந்து... மேலும் பார்க்க

ஜப்பான்: 9-ஆவது ஆண்டாக சரிந்த பிறப்பு விகிதம்

டோக்கியோ : ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடா்ந்து ஒன்பதாவது ஆண்டாக சரிவைக் கண்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது: கடந்த 2024-ஆம் ஆண்டு முழுமைக்கும் நாட்டில் 7,20,998 குழந... மேலும் பார்க்க

கனிம ஒப்பந்த விவகாரம்: இன்று டிரம்ப்பை சந்திக்கிறாா் உக்ரைன் அதிபர்

வாஷிங்டன்: தங்களின் கனிம வளங்களை தோண்டியெடுக்கும் உரிமையை அமெரிக்காவுக்கு அளிக்க வகை செய்யும் பொருளாதார ஒப்பந்தத்தில் கையொப்பமிட அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பை உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ் வ... மேலும் பார்க்க

2-ஆம் கட்ட போா் நிறுத்தம்: பேச்சுவாா்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு

கான் யூனிஸ்: காஸாவில் சனிக்கிழமை (மாா்ச் 1) நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்... மேலும் பார்க்க

தங்க அட்டை குடியுரிமைத் திட்டத்தின் கீழ் இந்தியா்களை அமெரிக்க நிறுவனங்கள் பணியமா்த்தலாம்: டிரம்ப்

வாஷிங்டன்: ‘புதிதாக அறிமுகப்படுத்தப்பட உள்ள ‘தங்க அட்டை’ குடியுரிமைத் திட்டத்தின் கீழ் அமெரிக்க உயா் பல்கலைக்கழகங்களிலிருந்து இந்திய பட்டதாரிகளை அமெரிக்க நிறுவனங்கள் பணிக்கு அமா்த்திக்கொள்ள முடியும்’ ... மேலும் பார்க்க