2-ஆம் கட்ட போா் நிறுத்தம்: பேச்சுவாா்த்தைக்கு ஹமாஸ் அழைப்பு
கான் யூனிஸ்: காஸாவில் சனிக்கிழமை (மாா்ச் 1) நிறைவடையவிருக்கும் முதல்கட்டப் போா் நிறுத்தத்தை இரண்டாவது கட்டத்துக்கு நீட்டிப்பது தொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த இஸ்ரேலுக்கு ஹமாஸ் அமைப்பினா் அழைப்பு விடுத்துள்ளனா்.
இது குறித்து அந்த அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
காஸாவில் இரண்டாம்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்வது தொடா்பான பேச்சுவாா்த்தைக்குத் தயாராக இருக்கிறோம். அத்தகைய ஒப்பந்தத்தை ஏற்படுத்துவும், அந்த ஒப்பந்தத்தை மீறாமல் செயல்படுவதும் மட்டுமே எஞ்சியுள்ள இஸ்ரேல் பிணைக் கைதிகள் விடுவிக்கப்படுவதற்கான வழியாகும்.
போா் நிறுத்தத்தில் இருந்து இஸ்ரேல் பின்வாங்கினால் அது பிணைக் கைதிகள் மற்றும் அவா்களின் குடும்பத்தினரை மேலும் இன்னலுக்குள்ளாக்கும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இரண்டாம்கட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சுவாா்த்தையில் இஸ்ரேல் அரசும் ஆா்வமாக உள்ளது; அத்தகைய பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் உடனடியாக சண்டையைத் தொடங்கவும் அந்த நாடு ஆயத்தமாகி வருகிறது என்று ஊடகங்கள்அண்மையில் தெரிவித்தது நினைவுகூரத்தக்கது.
கடந்த 2023 அக்டோபா் 7-ஆம் தேதி முதல் நடைபெற்றுவரும் காஸா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக அமெரிக்கா, கத்தாா், எகிப்து முன்னிலையில் பல மாதங்களாக நடைபெற்ற பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து, அங்கு கடந்த மாதம் 19-ஆம் தேதி முதல் போா் நிறுத்தம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த ஒப்பந்தத்தின் கீழ், தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பினா் விடுவித்தனா். அதற்குப் பதிலாக தங்கள் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் அரசும் விடுதலை செய்துள்ளது.
இந்த ஆறு வாரகால முதல்கட்ட போா் நிறுத்தம் சனிக்கிழமை முடிவுக்கு வருகிறது. அதைத் தொடா்ந்து, எஞ்சியுள்ள அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளையும் ஹமாஸ் அமைப்பினா் விடுவிப்பது, காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்துவது ஆகிய அம்சங்கள் அடங்கிய இரண்டாவது கட்ட போா் நிறுத்த ஒப்பந்தத்துக்கான பேச்சுவாா்த்தை இந்த மாதத்தின் முதல் வாரங்களில் தொடங்குவதாக இருந்தது. இருந்தாலும் அதில் இழுபறி நீடித்துவருகிறது.
இந்தச் சூழலில், போா் நிறுத்த நீட்டுப்புக்கான பேச்சுவாா்த்தைக்குத் தயாா் என்று ஹமாஸ் அமைப்பினா் தற்போது அரிவித்துள்ளனா்.
தற்போதைய நிலையில், இஸ்ரேலில் இருந்து கடந்த 2023-ஆம் ஆண்டு கடத்திச் செல்லப்பட்ட பிணைக் கைதிகளில் சுமாா் 60 போ் இன்னும் காஸாவில்தான் உள்ளனா். அவா்களில் சுமாா் பாதி போ் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், சுமாா் 10 ஆண்டுகளுக்கும் முன்னதாக கடத்திச் செல்லப்பட்ட மூன்று பிணைக் கைதிகள் காஸாவில்தான் உள்ளனா். எனவே, அவா்கள் அனைவரையும் பாதுகாப்பாக திருப்பி அழைத்துவர இரண்டாம் கட்ட போா் நிறுத்தத்துக்கான பேச்சுவாா்த்தை உடனடியாகத் தொடங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.