செய்திகள் :

நேற்று ஓய்வு.. இன்று நியூயார்க் அணி கேப்டன்..! பூரனின் புதிய பரிமாணம்!

post image

சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அடுத்த நாளே நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக நிக்கோலஸ் பூரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் அதிரடி ஆட்டக்காரரான நிக்கோலஸ் பூரன், தனது 29 வயதிலேயே அனைத்துவிதமான சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார். இந்த திடீர் முடிவுக்கான காரணங்கள் குறித்து பூரன் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில், அமெரிக்காவில் நடைபெறும் மேஜர் லீக் தொடருக்கான நியூயார்க் அணியின் புதிய கேப்டனாக பூரன் நியமிக்கப்பட்டிருக்கிறார். மும்பை இந்தியன்ஸ் அணியின் உரிமையாளரான ரிலையன்ஸ் நிறுவனத்தின் மற்றொரு அணியாக இந்த நியூயார்க் அணி இருக்கிறது.

ஐபிஎல்லில் லக்னௌ அணிக்கு விளையாடிவரும் நிக்கோலஸ் பூரன், லீக் போட்டிகளில் மிகவும் ஆபத்தான வீரராக கருதப்படுகிறார். இவர் இந்தாண்டு ஐபிஎல் தொடரிலேயே 40 சிக்ஸர்கள் விளாசியிருந்தார். மேலும், சிபிஎல், எம்எல்சி தொடர்களிலும் விளையாடி வருகிறார்.

2023 ஆம் ஆண்டில் எம்எல்சி தொடரில் அதிக ரன்களை(388) குவித்திருந்தார் பூரன். நிகழாண்டுக்கான தொடர் வருகிற வியாழக்கிழமை தொடங்கவிருக்கிறது. எம்ஐ நியூயார்க் அணியில் குயிண்டன் டிக்காக், பொல்லார்ட், ரஷீத்கான் என நட்சத்திர பட்டாளமே குவிந்துள்ளது.

மேற்கிந்திய தீவுகள் அணிக்காக அதிக சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியவர் என்ற சாதனையுடன் 2275 ரன்கள் குவித்துள்ளார். மேலும், 61 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1983 ரன்கள் குவித்திருக்கிறார். ஆனால், அவர் ஒரு டெஸ்ட் போட்டியில்கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: டி20 தொடரை முழுமையாக வென்ற இங்கிலாந்து: தொடரும் புரூக்கின் வெற்றிப் பயணம்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார்!

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் திலீப் தோஷி காலமானார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் திலீப் தோஷி இதய கோளாறு காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையில் திங்கள்கிழமை இரவு(ஜூன் 23) ... மேலும் பார்க்க

விக்கெட் வீழ்த்தினால் இந்தியாவுக்கு வெற்றி: இங்கிலாந்துக்கு 371 ரன்கள் இலக்கு!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முதல் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நான்காவது நாளான இன்று(ஜூன் 23) இந்தியா தனது இரண்டாவது இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இதன்மூலம், இந்திய... மேலும் பார்க்க

முதல் இந்திய விக்கெட் கீப்பர்; ரிஷப் பந்த்தின் மற்றுமொரு சாதனை!

டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் விக்கெட் கீப்பரான ரிஷப் பந்த் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்தப் ... மேலும் பார்க்க

2-வது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டின் இரண்டாவது இன்னிங்ஸிலும் சதம் விளாசி ரிஷப் பந்த் சாதனை படைத்துள்ளார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகி... மேலும் பார்க்க

சதம் விளாசிய கே.எல்.ராகுல்; வலுவான நிலையில் இந்திய அணி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் கே.எல்.ராகுல் சதம் விளாசினார்.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இந்த... மேலும் பார்க்க

என்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது; சௌரவ் கங்குலி வருத்தம்!

தன்னுடைய சதங்களை தவறவிட்டிருக்கக் கூடாது என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி பேசியுள்ளார்.இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி இந்திய அணிக்காக 311 ஒருநாள் மற்றும் 113 டெஸ்ட் போட... மேலும் பார்க்க