செய்திகள் :

வங்கதேச அணிக்கு புதிய கேப்டன்; அணியின் நலனை பாதிக்குமா?

post image

ஒருநாள் போட்டிகளுக்கான வங்கதேச அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த நஜ்முல் ஹொசைன் ஷாண்டோவுக்குப் பதிலாக, புதிய கேப்டனை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நியமித்துள்ளது.

ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனாக மெஹிதி ஹாசன் மிராஸ் செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் நேற்று (ஜூன் 12) அறிவித்தது. மெஹிதி ஹாசன் மிராஸ் அடுத்த ஓராண்டுக்கு அணியின் கேப்டனாக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

அணியின் நலனை பாதிக்குமா?

ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக வங்கதேச கிரிக்கெட் வாரியம் ஒருநாள் போட்டிகளுக்கான புதிய கேப்டனை நியமித்துள்ள நிலையில், கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் அணியின் நலனை பாதிக்காது என புதிதாக கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள மெஹிதி ஹாசன் மிராஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: அணியின் கேப்டனை எவ்வாறு தேர்வு செய்கிறார்கள் என்பது எனக்குத் தெரியாது. அணிக்கான கேப்டனை தேர்ந்தெடுப்பது கிரிக்கெட் வாரியக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கேப்டன் பொறுப்பு தொடர்பாக தனிப்பட்ட நபரால் எந்த ஒரு முடிவும் எடுக்க முடியாது. வங்கதேச கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் நேற்று என்னை தொலையில் அழைத்துப் பேசினார். அவர்கள் எனக்கு கேப்டன் பொறுப்பை வழங்க உள்ளதாகவும், அவர்களுக்கு அதிக நேரமில்லை எனவும் கூறினார்.

நஜ்முல் ஹொசைன் ஷாண்டோ ஒருநாள் போட்டிகளில் நன்றாக விளையாடி வருகிறார். ஆனால், கேப்டன் பொறுப்பில் மாற்றத்தைக் கொண்டு வருவது கிரிக்கெட் வாரியத்தின் முடிவு. கேப்டன் பொறுப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் அணியின் நலனை பாதிக்கும் என நான் நினைக்கவில்லை. நாங்கள் அனைவரும் நாட்டுக்காக விளையாடுகிறோம். கேப்டன் பொறுப்பு மாற்றம் என்னையோ, ஷாண்டோவையோ பாதிக்காது. அவர் கேப்டனாக செயல்பட்டபோது, அவருக்கு நிறைய உதவியுள்ளேன். நான் கேப்டனாக செயல்படும்போது, எனக்கு அவர் உதவி செய்வார். நாங்கள் கிரிக்கெட்டில் வங்கதேசத்தை முன்னோக்கி கொண்டு செல்வோம் என்றார்.

இதையும் படிக்க: இங்கிலாந்து டெஸ்ட் தொடரை நினைத்து பதற்றமாக உள்ளது: இந்திய அணியின் பயிற்சியாளர்

27 வயதாகும் மெஹிதி ஹாசன் மிராஸ் இலங்கைக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலிருந்து அணியைக் கேப்டனாக வழிநடத்தவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இனிமேல் பவுண்டரிக்கு வெளியே கேட்ச் இல்லை..! எம்சிசியின் புதிய விதிமுறை!

எம்சிசியின் புதிய விதிமுறையின்படி இனிமேல் பவுண்டரிக்கு வெளியே பந்தினை கேட்ச் பிடிப்பது ரத்து செய்யப்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் தற்போதைய விதிமுறையின்படி முதல்முறை பந்தினை தொடுவது பவுன்டரி எல்லைக்குள் இ... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டி: காயம் காரணமாக ஸ்டீவ் ஸ்மித் விலகல்; மே.இ.தீவுகள் தொடரில் விளையாடுவாரா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின்போது, ஸ்டீவ் ஸ்மித்துக்கு காயம் ஏற்பட்டதால் அவர் இறுதிப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா... மேலும் பார்க்க

டபிள்யூடிசி இறுதிப்போட்டி: மார்க்ரம் அரைசதம்; நிதானமாக இலக்கை நெருங்கும் தென்னாப்பிரிக்கா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்க அணி நிதானமாக இலக்கை நெருங்கி வருகிறது.உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க... மேலும் பார்க்க

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: அரைசதம் விளாசி வரலாறு படைத்த மிட்செல் ஸ்டார்க்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மிட்செல் ஸ்டார்க் அரைசதம் அடித்து சாதனை படைத்துள்ளார்.ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் லார்ட்ஸ் திடலில் உலக டெஸ்ட் சா... மேலும் பார்க்க

தென்னாப்பிரிக்க டாப் ஆர்டர் ஆஸி. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்: ரிக்கி பாண்டிங்

தென்னாப்பிரிக்க அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.உலக டெஸ்ட் சாம்... மேலும் பார்க்க

ஸ்டார்க் அரைசதம்: டபிள்யூடிசியை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு!

டபிள்யூடிசியை வெல்ல தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.லண்டனில் நடைபெற்று வரும் டபிள்யூடிசி இறுதிப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸி. அணி 207 ரன்களுக்கு ஆல் அவுட்டானது... மேலும் பார்க்க