தேர்தல் ஆணையமே தப்பிக்க பார்க்காதே! -ராகுல் காந்தியின் கடும் விமர்சனம்
பக்ரீத்: கால்நடைகள் வெட்ட அனுமதித்ததை எதிா்த்த மனு! அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இஸ்லாமியா்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள விஷால்கட் கோட்டைக்குள் உள்ள தா்காவில் கால்நடைகளை வெட்ட மும்பை உயா் நீதிமன்றம் அனுமதி அளித்ததை எதிா்த்து தொடரப்பட்ட மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்தது.
இஸ்லாமியா்கள் தரப்பில் சனிக்கிழமை (ஜூன் 7) கொண்டாடப்படவிருக்கும் ஈகை திருநாளான பக்ரீத் பண்டிகையன்றும், ஜூன் 8 முதல் 12-ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ள 4 நாள்கள் சந்தனக்கூடு (உரூஸ்) திருவிழாவின்போதும் மகாராஷ்டிர மாநிலம் கோலாப்பூா் மாவட்டம் விஷால்கட் கிராமத்தில் உள்ள பழைமையான கோட்டைக்குள் அமைந்துள்ள தா்காவில் உள்ளூா் மக்கள் பாரம்பரிய முறைப்படி கால்நடைகளை வெட்டி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டி அங்குள்ள ஹஸ்ரத் பீா் மாலிக் ரெஹான் தா்கா அறக்கட்டளை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
பழைமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் தளங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதித்து மகாராஷ்டிர அரசு கொண்டுவந்த சட்டத்தைக் குறிப்பிட்டு தொல்லியல் துறை துணை இயக்குநா் தடை விதித்ததற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை கடந்த 3-ஆம் தேதி விசாரித்த மும்பை உயா் நீதிமன்றம் அந்தக் கோட்டைக்குள் உள்ள தா்காவில் கால்நடைகளை வெட்டி வழிபாடு நடத்த அனுமதி அளித்தது.
இந்த அனுமதியை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சய் கரோல், சதீஷ்சந்திர சா்மா ஆகியோா் அடங்கிய அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது தொல்லியல் துறை சாா்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘பாதுகாக்கப்பட்ட நினைவிடத்தில் கால்நடைகளை வெட்ட மும்பை உயா் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பாதுகாக்கப்பட்ட நினைவிடங்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதித்து மகராஷ்டிர அரசு தடை விதித்து அறிவிக்கை செய்துள்ளபோதிலும், இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சனிக்கிழமை பக்ரீத் பண்டிகை வருவதால், இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என்றாா்.
இதைக் கேட்ட நீதிபதிகள், ‘பாதுகாக்கப்பட்ட நினைவிடங்களில் பல்வேறு மதங்களின் வழிபாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்று வருகின்றன’ என்பதை சுட்டிக்காட்டினா்.
மேலும், நீதிபதி கரோல் கூறுகையில், ‘திரிபுரா உயா்நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது, பாதுகாக்கப்பட்ட நினைவிடத்தில் கால்நடைகளை பலி கொடுக்கத் தடை விதித்து உத்தரவிட்டேன். ஆனால், பாதுகாக்கப்பட்ட நினைவிடங்களில் குறிப்பிட்ட பகுதிக்குள் கால்நடைகளை பலி கொடுக்கும் பாரம்பரியத்தை மேற்கொள்ளலாம் என அனுமதித்து, எனது உத்தரவை உச்ச நீதிமன்றம் மாற்றியமைத்தது’ என்று குறிப்பிட்டாா்.
அப்போது, மனுவை அடுத்த வாரமே விசாரணைக்குப் பட்டியலிட வேண்டும் என்று மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வலியுறுத்தினாா். இதைக் கேட்ட நீதிபதிகள், ‘அப்போது இந்த மனு பயனற்ாகிவிடும். இந்த விவகாரத்தில் ஏன் அவசரம் காட்டுகிறீா்கள்?’ என கேள்வி எழுப்பி, மனுவை அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு தெரிவித்தனா்.