செய்திகள் :

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

post image

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஶ்ரீதர் வாண்டையார்
ஶ்ரீதர் வாண்டையார்

பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று நடந்து வருகிறது.

இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு அமைப்பினரும் இன்று பசும்பொன்னுக்கு வருகை தந்து முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

வி.வி.ஐ.பி-க்களின் வருகையினால் அதிகமான அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த போதிலும், அரசியல் கட்சி, சாதி அமைப்புகளின் தலைவர்களோடு வரும் தொண்டர்களை காவல்துறையினரால் கட்டுப்படுத்த முடிவில்லை. இதனால் தேவர் நினைவிடப் பகுதியில் கூட்டத்தைக் கலைந்து செல்ல வைக்க மிகவும் சிரமமாக இருந்தது.

ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா
ஸ்ரீதர் வாண்டையார் தர்ணா

இந்த நிலையில் அஞ்சலி செலுத்த ஆதரவாளர்களுடன் வந்த மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார், நினைவிடத்திலுள்ள தேவர் சிலைக்கு மரியாதை செய்து பூஜை செய்தபோது அங்கிருந்த பூசாரிகள் ஏதோ கூறியதாகச் சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த ஸ்ரீதர் வாண்டையார் நினைவிடத்தின் பூசாரி ராஜா என்பவரைத் திடீரென கன்னத்தில் அறைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனால் நினைவிடப் பொறுப்பாளர்கள், பணியாளர்கள் கோபத்துடன் கேள்வியெழுப்ப அங்கிருந்த காவல்துறை அதிகாரிகள் அவர்களைச் சமாதனப்படுத்தினர். அதன் பின்பு ஸ்ரீதர் வாண்டையார் அங்கேயே அமர்ந்து தர்ணா செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை அதிகாரிகளும், அங்கிருந்த அரசியல் கட்சியினரும் அவரைச் சமாதனபடுத்தி அங்கிருந்து அனுப்பினார்கள். இதனால் சிறிது நேரம் மக்கள் அஞ்சலி செலுத்த முடியாததால் சலசலப்பும், பதற்றமும் ஏற்பட்டது.

தேவர் நினைவிடம்
தேவர் நினைவிடம்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவருக்கு மரியாதை செய்ய வந்த இடத்தில், அவருடைய நினைவிடப் பணியாளரை, அவரை அடையாளமாகக் கொண்டு அமைப்பு நடத்தும் ஸ்ரீதர் வாண்டையார் தாக்கியது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வங்கதேச வன்முறை : `ஷேக் ஹசீனா குற்றவாளி; மரண தண்டனை விதிக்கிறோம்’ - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா, அரசு வேலைகளில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இட ஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டார். இந்த உத்தரவுக்கு எதிராக 2024 ஜூலை மாதம் பல்கலைக்கழக மாணவர்கள... மேலும் பார்க்க

மும்பை: மாநகராட்சி தேர்தல்; `சுயமாக முடிவெடுக்கலாம்!’ - காங்கிரஸை கைகழுவ தயாராகும் உத்தவ்?

மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் ஜனவரி மாதம் மாநகராட்சி தேர்தல் நடக்கிறது. இத்தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. ஏற்கனவே மாநகராட்சி வார்டுகள் குலுக்கல் முறையில் எது பெண்களுக்கானது என்பத... மேலும் பார்க்க

Mexico: அதிபர் மீது அதிருப்தி; மெக்சிகோவிலும் வெடித்த Gen Z போராட்டம் - ஏன், என்ன நடந்தது?

இந்தோனேசியா, வங்கதேசம், மடகாஸ்கர் மற்றும் நேபாளத்தில் ஆளும் அரசாங்கத்தின் பல்வேறு நிர்வாகக் கோளாறுகளை எதிர்த்து மிகப் பெரிய 'ஜென் Z' போராட்டங்கள் நடைபெற்றன. இந்தப் போராட்டங்கள் அனைத்தும் அந்தந்த நாடுக... மேலும் பார்க்க

Pa.Ranjith:``கம்யூனிஸ்ட்டுகள் ஏன் அம்பேத்கரை வாசிக்கவில்லை?" - பா.ரஞ்சித் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீலம் பண்பாட்டு மையம் சார்பில், சென்னை தேனாம்பேட்டையில் அறிஞர் ராஜ் கௌதமன் நினைவு விருது வழங்கும் விழா நடைபெற்றது. 2025-ம் ஆண்டுக்கான அறிஞர் ராஜ் கெளதமன் நினைவு விருது ஆய்வாளர், எழுத்தாளர் வ.கீதா அவர்... மேலும் பார்க்க

தாசில்தாரைக் கடித்த வெறிநாய்கள்; களத்தில் இறங்கிய கலெக்டர்; அலுவலர்களுக்கு நோட்டீஸ்

தாசில்தார் ஒருவரை வெறி நாய் கடித்த சம்பவத்தால் கலெக்டரே களத்தில் இறங்கி அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருவது சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.மேசியதாஸ்சிவகங்கையில் வசிக்கும் மாவட்ட தேர... மேலும் பார்க்க