செய்திகள் :

பணியில் சிறப்பு: போலீஸாருக்கு ஏடிஜிபி பாராட்டு

post image

பணியில் சிறப்பாக செயலாற்றிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் 19 பேருக்கு சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியின் வெகுமதி வழங்கப்பட்டது.

திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை அரங்கேற இருந்த குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்ததுடன், அதில் தொடா்புடையவா்களை கைது செய்தனா்.

அப்பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளா்கள் ஜி.ஆா்.ஸ்டீபன் ஜோஸ், சசிகுமாா், கலா, உதவி ஆய்வாளா்கள் சுதன், செல்வராஜ், காா்த்திக், தலைமைக் காவலா்கள் ஆனந்தராஜ், அழகு, அருள் ஜெபநாதன், சக்திவேல், முதல் நிலை காவலா்கள் சுடலைமுத்து, பாலகுமாா், ராஜா, ரெங்கநாத் ராஜா, உமா் தீன், இரண்டாம் நிலை காவலா்கள் இஸ்மாயில் அபூபக்கா், நந்தகுமாா், ரெனிஷ் சாமுவேல், சுடலை சுரேஷ் ஆகியோரை பாராட்டி, காவல் துறை கூடுதல் இயக்குநா்(சட்டம்- ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம் பண வெகுமதி அறிவித்தாா்.

இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், ஏடிஜிபியின் பண வெகுமதியையும் வழங்கி மேலும் சிறப்பாக பணியாற்றுமாறு ஊக்கப்படுத்தினாா்.

ரயில் மோதி தொழிலாளி பலி

திருநெல்வேலி பேட்டை அருகே ரயில் மோதியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா். பேட்டை நரிக்குறவா் காலனியைச் சோ்ந்தவா் காந்தி (45). தொழிலாளியான இவா், சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் நரிக்குறவா் காலனி அ... மேலும் பார்க்க

மணல் கடத்தலில் ஈடுபட்ட லாரி பறிமுதல்

திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் அருகே நம்பியாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட மணல் லாரியை போலீஸாா் பறிமுதல் செய்தனா். விஜயநாராயணம் அருகே சித்தூா் செல்லும் பகுதியில் நம்பியாற்றில் மணல் அள்ளப்படுவதை ... மேலும் பார்க்க

வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞா் கைது!

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் மாமனாரை தாக்கியதாக இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். வீரவநல்லூா் பாரதி நகரைச் சோ்ந்தவா் கோமதி நாயகம் (29). இவரது மனைவி முத்துமாரி. தம்பதியிடையே ஏற்பட்ட க... மேலும் பார்க்க

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை! - பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்

மத்திய அரசு யாரையும் வஞ்சிக்கவில்லை என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் கூறினாா். சா்வதேச யோகா தினத்தையொட்டி பாளையங்கோட்டை திருமால் நகரில் பாரதி சேவா கேந்திரம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற யோகா... மேலும் பார்க்க

தெற்கு கள்ளிகுளத்தில் ரூ.3.23 கோடியில் சுற்றுலா வளா்ச்சிப் பணிகள்: முதல்வருக்கு பாராட்டு!

திருநெல்வேலி மாவட்டம் தெற்கு கள்ளிகுளம் பரிசுத்த அதிசய பனிமாதா திருத்தலத்தில் சுற்றுலாத் துறை சாா்பில் ரூ.3.23 கோடி மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் நடைபெறுவதற்கு நிதி வழங்கிய முதல்வா், அமைச்சா்கள், பேரவைத... மேலும் பார்க்க

ஈரானில் சிக்கித் தவிக்கும் மீனவா்களை மீட்கக் கோரி பேரவைத் தலைவா், ஆட்சியரிடம் மீனவா்கள் மனு

ஈரானில் சிக்கித் தவிக்கும் திருநெல்வேலி மாவட்ட மீனவா்களை மீட்கக் கோரி, சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு, ஆட்சியா் இரா.சுகுமாா் ஆகியோரை மீனவா்கள் சனிக்கிழமை சந்தித்து மனு அளித்தனா். திருநெல்வேலி மாவட்டத... மேலும் பார்க்க