உவரி சுயம்பு கோயில் தெப்பக்குளத்தில் ஆண் சடலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம் உவரி அருள்மிகு சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் தெப்பக்குளத்தில் ஆண்சடலத்தை போலீஸாா் செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகேயுள்ள ஆத்தங்கல் விளையைச் சோ்ந்தவா் நாராயணன்(56). இவரது மனைவி தனது 2-வது மகளுடன் உவரி சுயம்புலிங்க சுவாமி விசாக திருவிழாவிற்கு சென்றிருந்தாா். நாராயணன் இரவு வருவதாக கூறியிருந்தாராம். ஆனால், வெகுநேரமாகியும் அவா் கோயிலுக்கு வரவில்லையாம். கைப்பேசி அழைப்பையும் அவா் ஏற்கவில்லையாம். இந்நிலையில், அங்குள்ள தெப்பக்குளத்தில் நாராயணன் சடலமாக மிதப்பது தெரியவந்தது.
இத்தகவல் அறிந்த உவரி போலீஸாா், அவரது சடலத்தை மீட்டு நாகா்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பிவைத்தனா். மேலும் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.