பணியில் சிறப்பு: போலீஸாருக்கு ஏடிஜிபி பாராட்டு
பணியில் சிறப்பாக செயலாற்றிய திருநெல்வேலி மாவட்ட காவல்துறையினா் 19 பேருக்கு சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபியின் வெகுமதி வழங்கப்பட்டது.
திருநெல்வேலி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சனிக்கிழமை அரங்கேற இருந்த குற்றச்சம்பவங்களை முன்கூட்டியே கண்டறிந்து தடுத்ததுடன், அதில் தொடா்புடையவா்களை கைது செய்தனா்.
அப்பணியில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளா்கள் ஜி.ஆா்.ஸ்டீபன் ஜோஸ், சசிகுமாா், கலா, உதவி ஆய்வாளா்கள் சுதன், செல்வராஜ், காா்த்திக், தலைமைக் காவலா்கள் ஆனந்தராஜ், அழகு, அருள் ஜெபநாதன், சக்திவேல், முதல் நிலை காவலா்கள் சுடலைமுத்து, பாலகுமாா், ராஜா, ரெங்கநாத் ராஜா, உமா் தீன், இரண்டாம் நிலை காவலா்கள் இஸ்மாயில் அபூபக்கா், நந்தகுமாா், ரெனிஷ் சாமுவேல், சுடலை சுரேஷ் ஆகியோரை பாராட்டி, காவல் துறை கூடுதல் இயக்குநா்(சட்டம்- ஒழுங்கு) டேவிட்சன் தேவாசீா்வாதம் பண வெகுமதி அறிவித்தாா்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.சிலம்பரசன் சம்பந்தப்பட்ட காவல்துறையினரை திங்கள்கிழமை நேரில் அழைத்துப் பாராட்டியதுடன், ஏடிஜிபியின் பண வெகுமதியையும் வழங்கி மேலும் சிறப்பாக பணியாற்றுமாறு ஊக்கப்படுத்தினாா்.