செய்திகள் :

பணியில் தூங்கிய பாதுகாவலர்... புகைப்படம் எடுத்த சக ஊழியர் மீது துப்பாக்கிச்சூடு!

post image

இந்தூரில் பணியின்போது தூங்கிய பாதுகாவலர் ஒருவர் தன்னைப் புகைப்படம் எடுத்த சக ஊழியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள நகைக்கடையில் பாதுகாவலராக பணிபுரிபவர் பிரமோத் பாண்டே (56). இவர் கடந்த சனியன்று (மார்ச். 3) இரவுப் பணியின் போது தூங்கியதாகக் கூறப்படுகிறது.

இதைப் புகைப்படம் எடுத்த நகைக்கடையின் விற்பனையாளரான சஞ்சய் ஜக்தப் (49), ஊழியர்களின் வாட்சப் குழுவில் அதனைப் பகிர்ந்தார்.

இதனால், பிரமோத் கோபமடைந்தார். ஞாயிறன்று இரவு ஜக்தப் உடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின் தனது உரிமம் பெற்ற துப்பாக்கியால் அவரைச் சுட்டதில் கை மற்றும் கால்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டன.

இதையும் படிக்க | ரோஹித் சர்மா உடல் எடையைக் குறைக்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர் கருத்து!

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த ஜக்தப் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

துப்பாக்கியால் சுட்ட பிரமோத்தை காவல்துறையினர் கொலை முயற்சி வழக்கில் கைது செய்து அவரது துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.

1,090 கோடி டாலராகச் சரிந்த அந்நிய நேரடி முதலீடு

உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற தன்மை காரணமாக நடப்பு நிதியாண்டின் அக்டோபா்-டிசம்பா் காலாண்டில் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய நேரடி முதலீடு 1,090 கோடி டாலராகச் சரிந்துள்ளது. இது குறித்து தொழில் மற்ற... மேலும் பார்க்க

சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த தணிக்கை அல்லாத நடைமுறை: உச்சநீதிமன்றம்

புது தில்லி: சமூக ஊடக பதிவுகளை முறைப்படுத்த உரிய நடைமுறையை வகுக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை அறிவுறுத்தியது. ‘அத்தகைய நடைமுறை அந்தப் பதிவை தணிக்கை செயவதாக இருக்கக் கூடாது’ என்றும் உச்... மேலும் பார்க்க

அபு தாபியில் இந்திய பெண்ணுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தகவல்

புது தில்லி: ‘அபுதாபியில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கு ஏற்கெனவே தண்டனை நிறைவேற்றப்பட்டுவிட்டது’ என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது. அப்போத... மேலும் பார்க்க

பொது விநியோகத் திட்டத்துக்கு தேவையான கோதுமை உள்ளது: உணவுச் செயலா்

பனாஜி: பொது விநியோகத் திட்டத்தின்கீழ் (பிடிஎஸ்) மத்திய அரசின் நலத்திட்டங்களுக்கு விநியோகிக்க போதுமான அளவுக்கு கோதுமை கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவுச் செயலா் சஞ்சீவ் சோப்ரா திங்கள்கிழமை தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22% அதிகரிப்பு

புது தில்லி: கடந்த 5 ஆண்டுகளில் வங்கி, நிதி நிறுவனங்களில் பெண்கள் கடன் வாங்குவது 22 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் பெரும்பாலான கடன்கள் இடைநிலை நகரங்கள், கிராமப் பகுதிகளில் உள்ள பெண்களால் வாங்கப்பட்டுள... மேலும் பார்க்க

தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!

ஓலா நிறுவனம் சுமார் 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.மின்சார வாகன தயாரிப்புகளில் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான ஓலா எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடட்., நிறுவனத்தின் தலை... மேலும் பார்க்க