செய்திகள் :

பனானா ஏஐ: இணையத்தைக் கலக்கும் புடவை, 3டி, ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்கள்!

post image

கூகுளின் ஜெமினி ஏஐ புகைப்படங்கள் தற்போது இணையத்தைக் கலக்கி வருகின்றன.

'சாரி ட்ரெண்ட்' எனும் பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், 3டி புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் என செய்யறிவு தொழில்நுட்பத்தின் மூலம் புகைப்படங்களை உருவாக்குவதில் இளைஞர்கள் பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

உலகம் முழுவதும் அனைத்துத் துறைகளிலும் செய்யறிவு தொழில்நுட்பம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இதன் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என்று நிபுணர்கள் பலரும் கூறுகின்றனர்.

இதனிடையே பலருக்கும் குறிப்பாக கற்றுக்கொள்ளும் வயதில் உள்ள இளைஞர்களுக்கு இந்த தொழில்நுட்பம் பெரிதும் உதவியாக இருக்கிறது. பலரின் வேலையை எளிதாக்குகிறது என்று சொல்லலாம்.

அந்தவகையில் கூகுளின் ஜெமினி 2.5 ஏஐ (பனானா ஏஐ) நமக்குத் தேவையான வசதிகளுடன் புகைப்படங்களை உருவாக்கித் தருகிறது.

புகைப்படங்களில் எடிட் செய்வது, பல புகைப்படங்களை இணைத்து ஒரு புகைப்படத்தை உருவாக்குவது என பல வேலைகளைச் செய்கிறது.

உங்களுக்கு என்ன மாதிரியான புகைப்படம் வேண்டுமோ அதை ஏஐ-யிடம் வார்த்தைகளில் தெரிவிக்க வேண்டும். உங்கள் உள்ளீகளுக்கு ஏற்ப அது புகைப்படங்களை உருவாக்கித் தரும். உள்ளூர் மொழிகளும் ஏஐ புரிந்துகொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக தமிழில் தேவையான தகவல்களை வழங்கினாலும் ஏஐ அதற்கேற்ப புகைப்படங்களை மாற்றித் தருகிறது.

சமீபத்தில் இந்த முறையில் உருவாக்கப்பட்ட 3டி புகைப்படங்கள், பெண்கள் சேலை அணிந்திருக்கும் புகைப்படங்கள், ரெட்ரோ ஸ்டைல் புகைப்படங்களும் இணையத்தை கலக்கி வருகின்றன.

எப்படி செய்ய வேண்டும்?

இணையம் அல்லது மொபைல் போனில் ஜெமினி செயலி வழியாக கூகுள் ஏஐ ஸ்டூடியோவை திறக்க வேண்டும்.

உங்களுக்கு தேவையான புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு அதை எந்த கோணத்தில் எந்த பின்புலத்தில் எந்த தோற்றத்தில் மாற்ற வேண்டும் என்ற உள்ளீட்டைத் தயார் செய்ய வேண்டும். எந்த கலரில் உடை அணிய வேண்டும், எந்த மாதிரி ஹேர்ஸ்டைல், பின்புறத்தில் என்ன இருக்க வேண்டும்? என அனைத்து விவரங்களையும் கொடுக்கலாம். அதற்கேற்ப மிகவும் துல்லியமாக அந்த புகைப்படம் தயாராகிறது. அதுவே 3டி புகைப்படம் என்றால் அதுவும் கிடைக்கிறது. இதற்கு முகம் தெளிவாகத் தெரியும்படியான புகைப்படத்தை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இப்போதைய புகைப்படத்தை 1970, 80களில் உள்ள உடையில் கருப்பு- வெள்ளை புகைப்படங்களாக மாற்றுவது, 3டி புகைப்படங்கள் என தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

குறிப்பாக பெண்கள் பலரும் தங்கள் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து, 'சேலை கட்டியிருப்பது போல' மாற்றி தங்கள் சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகின்றனர்.

வெள்ளை நிறம், கருப்பு நிற புடவை, அனிமேஷன் கேரக்டர்கள், ஸ்பைடர் மேன், ரெட்ரோ ஸ்டைல் உள்ளிட்டவை தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இதற்கான சில குறிப்பிட்ட 'பிராம்ப்ட்' (அறிவுறுத்தல்கள்)களும் இணையத்தில் கிடைக்கின்றன.

இது ஒரு பக்கம் பொழுதுபோக்காக இருந்தாலும் மறுபக்கம் இது புகைப்படங்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுகின்றனர்.

Banana AI Trend: From Vintage Saree To Retro-Style Photos viral

இதையும் படிக்க | குழந்தைகளின் உடல் பருமனுக்கு காரணம் இதுதான்!

ஐடிஆர் இணையதளம் முடங்கியதால் பயனர்கள் அவதி!

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் அதிகம் பேர் ஒரேநாளில் அதற்கான ஐடிஆர் இணையதளத்தில் பதிவு செய்வதால் அத்தளம் முடங்கியுள்ளது. மாத சம்பளதாரா்கள், இதர வருவாய்ப் பிரிவினா், ஈட்டிய வ... மேலும் பார்க்க

முப்படை தளபதிகள் மாநாடு: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் முப்படை தளபதிகள் மாநாட்டைப் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். கொல்கத்தாவில் ராணுவம், விமானப்படை, கடற்படையின் மூத்த தளபதிகள் பங்கேற்கும் 16வது முப்படை தளபதிகளின் மா... மேலும் பார்க்க

பிரதமரின் வருகைக்கு மறுநாளே... மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு எரிப்பு!

மணிப்பூரில் குகி இனத் தலைவரின் வீடு மர்ம நபர்களால் நள்ளிரவு தீயிட்டு எரிக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. மணிப்பூரில் குகி - மைதேயி இனக்குழுக்களிடையே ஏற்பட்ட கலவரத்திற்குப் பிறகு முதல்முறை... மேலும் பார்க்க

ஷீஷ் மஹால் வெள்ளை யானையைப் போன்றது.. முதல்வர் ரேகா குப்தா!

ஷீஷ் மஹால் பங்களா வெள்ளை யானையைப் போன்றது, அதன் தலைவிதி குறித்து தில்லி அரசு இன்னும் முடிவு செய்யவில்லை என்று முதல்வர் ரேகா குப்தா கூறினார். 2015 முதல் ஆம் ஆத்மி தில்லியில் ஆட்சி அமைத்ததிலிருந்து கடந்... மேலும் பார்க்க

அமெரிக்க வரியால் ஆந்திரத்தில் இறால் ஏற்றுமதி பாதிப்பு: ரூ.25,000 கோடி இழப்பு!

அமெரிக்க வரி விதிப்பால் ஆந்திரத்தில் இறால் இறக்குமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் ரூ. 25,000 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் ... மேலும் பார்க்க

சிசிடிவிகளை கண்காணிக்க மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறை!

காவல் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் செயல்படாமல்போவதைத் தடுக்கும் வகையில், மனித தலையீடுகளற்ற தானியங்கி கட்டுப்பாட்டு அறைகளை அமைக்க உச்சநீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது. காவல் நிலையங்களில் சிசிடிவி க... மேலும் பார்க்க