செய்திகள் :

'பயங்கரவாதிகளுக்கு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனை' - பிரதமர் மோடி பேச்சு!

post image

பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு தண்டனையைப் பெறுவார்கள் என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

ஜம்மு - காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டம் பஹல்காமில் உள்ள பைசாரன் பள்ளத்தாக்கு பகுதியில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 2 வெளிநாட்டவர் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். மேலும் சிலர் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பிகார் மாநிலம் மதுபானி பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய பிரதமர் மோடி, பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறியுள்ளார்.

"இன்று பிகார் மண்ணில் இருந்து உலகத்திற்கே ஒன்று கூறுகிறேன். ஒவ்வொரு பயங்கரவாதியையும் அவர்களை ஆதரிப்பவர்களையும் இந்தியா அடையாளம் கண்டு கண்டுபிடித்துத் தண்டிக்கும். பூமியின் எல்லைகள் வரை அவர்களை துரத்திப் பிடிப்போம்.

பயங்கரவாதத்தால் இந்தியாவின் உணர்வு ஒருபோதும் உடைபடாது. பயங்கரவாதம் தண்டிக்கப்படாமல் இருக்காது. நீதி நிலைநாட்டப்படுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். இந்தத் தீர்மானத்தில் முழு தேசமும் ஒன்றுபட்டுள்ளது. மனிதநேயத்தில் நம்பிக்கை கொண்ட அனைவரும் நம்முடன் இருக்கின்றனர். பல்வேறு நாடுகளின் மக்களுக்கும் தலைவர்களுக்கும் நன்றி கூறுகிறேன்.

இந்த பயங்கரவாதத் தாக்குதலால் ஒட்டுமொத்த தேசமும் வருத்தத்தில் உள்ளது. இந்த தாக்குதலுக்குக் காரணமான பயங்கரவாதிகளும், இந்த சதியில் ஈடுபட்டவர்களும் அவர்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு பெரிய தண்டனையைப் பெறுவார்கள் என்பதை நான் மிகத் தெளிவாகச் சொல்லிக்கொள்கிறேன். 140 கோடி இந்தியர்களின் மன உறுதி பயங்கரவாதத்தை இருந்தஇடம் தெரியாமல் ஆக்கிவிடும்" என்று பேசியுள்ளார்.

பஹல்காம் தாக்குதல்: மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் ஆதரவு!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்த அனைத்துக் கட்சிக் கூட்டம் நிறைவு பெற்றது.பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதிக்க, தில்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தத... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் ராகுல்!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி நாளை(ஏப்.25) ஜம்மு - காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகருக்குச் செல்லவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலி... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல் எதிரொலி: இந்து கோயில்களில் முஸ்லிம் பணிபுரியத் தடை!

உத்தரப் பிரதேசத்தில் கோயில் கட்டுமானப் பணியில் இருந்த முஸ்லிம்களை கோயில் நிர்வாகத்தினர் பணிநீக்கம் செய்தனர்.உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உள்ள இந்து கோயிலின் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த இரண்டு ... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிதியுதவி!

பஹல்காம் தாக்குதலில் பலியானவர்களுக்கு நிவாரண நிதியுதவி அறிவித்து அஸ்ஸாம் முதல்வர் உத்தரவிட்டார்.ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியான 26 பேரின் குடும்பங்களுக்கும... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: ஜி20 நாடுகளின் தூதரக அதிகாரிளுக்கு மத்திய அரசு விளக்கம்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக சீனா, கனடா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் தூதர்களுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் இன்று விளக்கமளித்தது.ஜம்மு - காஷ்மீர் பஹல்காமில் ஏப்.22 (செவ்வாய்க்கிழமை) பயங்கரவாதிக... மேலும் பார்க்க

ரூ.7 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட நக்சல் தம்பதி சரண்!

சத்தீஸ்கரின் கபிர்தம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினரால் வெகுமதி அறிவித்து தேடப்பட்டு வந்த நக்சல் தம்பதி சரணடைந்துள்ளனர்.மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தோ... மேலும் பார்க்க