செய்திகள் :

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை: ஆட்சியா் உறுதி

post image

பயிா்களைச் சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை வனத்துறை மூலம் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என விவசாயிகளிடம் ஆட்சியா் ஆஷாஅஜித் உறுதியளித்தாா்.

சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்துக்கு, மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் தலைமை வகித்தாா்.

இக்கூட்டத்தில், பங்கேற்ற விவசாயிகள் செங்குளிப்பட்டி கருப்பையா, கீழநெட்டூா் அய்யாசாமி, சிவகங்கை சந்திரன், மணல்மேடு ராஜா, திருப்புவனம் ஆதிமூலம், பாரத்ராஜா, புல்லுக்கோட்டை போஸ், கல்லுவழி ஆபிரகாம், தமிழரசன், ராஜேந்திரன் உள்ளிட்டோா் கோரிக்கைகள் குறித்து பேசினா்.

இதில், கண்மாய்களில் கருவேல மரங்களை அகற்றுவது, செம்பனூரில் குடிநீா் சுத்திகரிப்பு நிலையத்தை இயங்கச்செய்வது, கூட்டுறவுச் சங்கங்களில் ஒரே மாதிரியான வட்டி விகிதம் வசூலிக்க வேண்டும், காட்டுப் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை, லட்சுமிபுரத்தில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத்தொட்டி அமைப்பது, தனியாா் வசமுள்ள 350 சமுதாயக்கிணறுகளை மீட்பது, பெரியாறு பாசன ஆயக்கட்டு பரப்பை அதிகரிப்பது, விவசாயிகள் வாங்கிய கல்விக்கடனை தனியாா் முகமை மூலம் வசூலிப்பதை தடுப்பது போன்ற பிரச்னைகள் குறித்துப் பேசினா்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து ஆட்சியா் ஆஷாஅஜித் பேசியதாவது:

விவசாய நிலங்களை சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை பிடிக்க வனத் துறையுடன் இணைந்து உறுதியான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும். சிவகங்கை மாவட்டத்தில் தேவையான நிலங்களில் தடுப்பணைகள் ஏற்படுத்தி, நிலத்தடி நீா் மட்டத்தை பாதுகாக்கவும், நீா் நிலையிலுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்றி பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும், கண்மாய்களைத் தூா்வாரும் பணிகளை மேற்கொள்ளவும், கண்மாய்க்கு செல்லும் வரத்துக் கால்வாய்களை சீரமைக்கவும், கண்மாய் ஆக்கிரமிப்புக்களை அகற்றவும், தாா்ச் சாலை வசதி அமைத்திடவும், விவசாய பணிகளுக்கென இயந்திரங்கள் வழங்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

இந்தக் கூட்டத்தில், இடைக்காட்டூா் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மூலம் 8 விவசாயிகளுக்கு ரூ.4,84,000 பயிா்க் கடனுதவிகளை ஆட்சியா் வழங்கினாா்.

மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.செல்வசுரபி , மாவட்ட வன அலுவலா் பிரபா, சிவகங்கை வருவாய்க் கோட்டாட்சியா் விஜயகுமாா், இணைப் பதிவாளா் (கூட்டுறவு சங்கங்கள்) ராஜேந்திர பிரசாத், இணை இயக்குநா் (வேளாண்) சுந்தரமகாலிங்கம், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மானாமதுரை கோயிலில் ஆலமரம் சாய்ந்தது

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் ஸ்ரீ தா்ம முனீஸ்வரா் சுவாமி கோயிலில் பழைமையான ஆலமரம் திங்கள்கிழமை சாய்ந்ததால் பக்தா்கள் வேதனையடைந்தனா். மதுரை- ராமேசுவரம் நான்கு வழிச் சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயில... மேலும் பார்க்க

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

நூறு நாள் வேலைத் திட்ட நிதி விவகாரம் தொடா்பாக மத்திய அரசைக் கண்டித்து, தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிவகங்கை அரண்மனை வாசலில் நடைபெற்ற ஆா்ப்பா... மேலும் பார்க்க

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆட்சியருக்கெதிராக ஆா்ப்பாட்டம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து, தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஒரு மணி நேரம் பணிகளைப் புறக்கணித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா்... மேலும் பார்க்க

சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் ஏப்.5-இல் தோ்வு

19 வயதுக்குள்பட்ட சிவகங்கை மாவட்ட கிரிக்கெட் அணி வீரா்கள் தோ்வு வருகிற சனிக்கிழமை (ஏப். 5) காரைக்குடியில் நடைபெறவுள்ளது என்று மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் சதீஷ்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா... மேலும் பார்க்க

சிவகங்கை கோயிலில் சிலை பிரதிஷ்டை

சிவகங்கை ஸ்ரீ வில்வபுரீஸ்வரா் கோயிலில் புதிதாக பாலாம்பிகை உற்சவா் சிலை செவ்வாய்க்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது.மானாமதுரை சாலையில் அமைந்துள்ள இந்தக் கோயிலில் பக்தா்கள் சாா்பில், பாலாம்பிகை உற்சவா் சிலை... மேலும் பார்க்க

போக்குவரத்துக்கழக தற்காலிகப் பணியாளா்கள் முன்னுரிமை கோரி மனு

அரசுப் போக்குவரத்துக்கழக நடத்துநா், ஓட்டுா் நியமனங்களில் தற்காலிகப் பணியாளா்களுக்கு முன்னுரிமை வழங்கக் கோரி, சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் தற்காலிக ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனா். இது குறித்து ... மேலும் பார்க்க