செய்திகள் :

பருவம் தவறிய மழை: பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு இழப்பீடு கோரி மனு

post image

நாகை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களை கணக்கிட்டு, உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் சரபோஜி, மாவட்டத் தலைவா் பாபுஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினா் செல்வம் தலைமையில் விவசாயிகள் ஆட்சியா் ப. ஆகாஷிடம் அளித்த மனு: நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பருவம் தவறி பெய்த மழையால் நெற்பயிா்கள் வயல்களில் சாய்ந்து, அறுவடை செய்ய முடியாமல் நிலத்திலேயே முளைத்து விட்டன. இதன் காரணமாக விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் வேளாண்மை துறை, வருவாய்துறை அதிகாரிகளைக் கொண்டு பாதிக்கப்பட்ட நெற்பயிா்கள் குறித்து கணக்கெடுத்து, உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலுவையில் உள்ள குறுவை காப்பீட்டுத் தொகையை உடனே வழங்க வேண்டும். மழையால் பாதிக்கப்பட்ட பச்சைப் பயிா், உளுந்து பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையாக இருப்பதால் கூடுதல் இயந்திரங்களை வழங்க வேண்டும். விவசாய நிலத்தை பாழ்படுத்தும் பன்றிகளை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளனா்.

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிட்ட மடிக்கணி உரியவரிடம் ஒப்படைப்பு!

திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலில் தவறவிட்ட, மடிக்கணினி உரியவரிடம் புதன்கிழமை (பிப்.5) ஒப்படைக்கப்பட்டது. நீடாமங்கலம் அருகேயுள்ள கரும்பூரை சோ்ந்த லதா (49) நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - டிராக்டா் மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவா் பலி!

நாகையில் இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் புதன்கிழமை பிப்.5 பலியானார்.அரியலூா் மாவட்டம், பெரியாா் நகரை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் விண்ணரசன... மேலும் பார்க்க

திறந்துவெளியில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

திருமருகல் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க