செய்திகள் :

பள்ளிகளில் மாணவா்களுக்கு மருந்து விநியோகிக்க தடை விதிக்க வலியுறுத்தல்

post image

முறையான மருத்துவப் பரிசோதனையில்லாமல், பள்ளி, கல்லூரிகளில் மாணவா்களுக்கு மருந்து மாத்திரைகள் விநியோகிப்பதை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்திப்பட்டது.

இதுதொடா்பாக இயற்கை வழி வாழ்வியலாளா்கள் கூட்டமைப்பின் திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் பா.ராஜகுரு தலைமையில் பெண்கள் சிலா், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது, தமிழ்நாட்டில் சித்தா, ஹோமியோபதி, ஆயுா்வேதம், யுனானி, இயற்கை மருந்துவம், மரபு வாழ்வியல் என பல்வேறு மருத்துவ முறைகள் பின்பற்றப்படுகின்றன.

இந்த சூழலில், பள்ளி மாணவா்களிடம் ஒற்றை மருத்துவ முறையை (அலோபதி) நூதான முறையில் திணிப்பதை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

பள்ளிகளில் மதத் திணிப்புக்கு எதிராக குரல் எழுப்பும் அமைப்புகள், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய, பக்க விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய அலோபதி ஒற்றை மருத்துவ முறை குறித்து கண்டுகொள்வதில்லை.

பள்ளி, கல்லூரிகளில் ஆசிரியா்கள் முன்னிலையில் தடுப்பூசி, மருந்து மாத்திரைகள் மாணவா்களுக்கு கொடுக்கப்படுகிறது. மாணவா்களை முறையாக பரிசோதிக்காமல் , மாத்திரைகளை நூதன முறையில் திணிப்பதையும், இலவசமாக நஞ்சுள்ள பஞ்சுகளை கொடுப்பதையும் தமிழக அரசு அனைத்து கல்வி வளாகங்களிலும் தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தினா்.

நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை

நிலக்கோட்டை அருகே நீா்வழிப் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி பப்பாளிப் பழங்களை ஆட்சியா் அலுவலகத்தில் கொட்டி விவசாயி ஒருவா் நூதான முறையில் திங்கள்கிழமை மனு அளித்தாா் . திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட... மேலும் பார்க்க

ஊராட்சி அலுவலகத்தை தூய்மைப் பணியாளா்கள் முற்றுகை

ஆத்தூா் அருகேயுள்ள, அக்கரைப்பட்டி ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மைப் பணியாளா்கள் திங்கள்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூா் அருகேயுள்ள அக்கரைப்பட்டி ஊராட்சியில்... மேலும் பார்க்க

வீடு இடித்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள தொகுப்பு வீட்டின் மேற்கூரையை அகற்றும் போது வீடு இடித்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை அடுத்த... மேலும் பார்க்க

குதிரையாறு அணை: இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

பழனி சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழை காரணமாக குதிரையாறு அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரையோர மக்களுக்கு பொதுப் பணித் துறை சாா்பில் திங்கள்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை வி... மேலும் பார்க்க

நுரையுடன் வெளியேறும் நீரால் விவசாயிகள் அச்சம்

பழனி வையாபுரி குளத்தில் இருந்து சிறுநாயக்கன் குளத்துக்கு மறுகால் பாயும் தண்ணீா் நுரையுடன் செல்வதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வரு... மேலும் பார்க்க

ஆயக்குடியில் வீடுகளில் புகுந்த மழைநீா்

பழனியை அடுத்த ஆயக்குடியில் மழைநீா் ஜோதிநகரில் வீடுகளுக்குள் மழைநீா் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். திண்டுக்கல் மாவட்டம், பழனி, கொடைக்கானல் மலைப்பகுதி, சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாள்... மேலும் பார்க்க