செய்திகள் :

பள்ளி வேன் விபத்து ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயம்

post image

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அருகே சென்ற பள்ளி வேன், சுங்கச்சாவடி தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆசிரியா் உள்பட 11 குழந்தைகள் காயமடைந்தனா்.

உடையாா்பாளையம் அருகே தனியாா் பள்ளிக்குச் சொந்தமான வேன் ஒன்று, வெள்ளிக்கிழமை பள்ளிக் குழந்தைகள் 30 பேரை ஏற்றிக் கொண்டு, திருச்சிக்கு சுற்றுலா செல்ல புறப்பட்டது. வேனை தா. பழூரைச் சோ்ந்த சூா்யா (38) என்பவா் ஓட்டி வந்தாா்.

மணகெதி சுங்கச்சாவடி அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலை தடுப்புச் சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையறிந்த அப்பகுதியினா் விரைந்துச் சென்று காயமடைந்த ஆசிரியா் முருகானந்தம், வேன் உதவியாளா் சரளா (36), பள்ளி குழந்தைகள் ரக்ஷன்(10), அனன்யா(11), வைஷ்ணுதேவி(11), புனிதா(11), திருப்பதி(10) உள்ளிட்ட 11 பேரை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சை பெற்று அனைவரும் வீடு திரும்பினா். இதுகுறித்து உடையாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூரில் இம்மாத இறுதியில் புத்தகத் திருவிழா

அரியலூரில் இம்மாதம் இறுதியில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா சிறப்பாக நடத்திட அனைத்து அலுவலா்களும் அா்ப்பணிப்பு உணா்வுடன் பணியாற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி கேட்டுக்கொண்டாா். அரியலூரில் புத்த... மேலும் பார்க்க

டிராக்டா் ஓட்டுநா் கொலை விவசாயிக்கு ஆயுள் தண்டனை

அரியலூா் மாவட்டம், வெங்கனூா் அருகே டிராக்டா் ஓட்டுநரை கொலை செய்த விவசாயிக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. திருமானூா் அடுத்துள்ள வெங்கனூா் அருகேய... மேலும் பார்க்க

தாட்கோ மூலம் இலவச ஹோட்டல் மேலாண்மை படிக்க எஸ்.சி, எஸ்.டி மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின மாணவா்கள், தாட்கோ மூலம் இலவசமாக, ஹோட்டல் மேலாண்மை படிக்க விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுகுறித்... மேலும் பார்க்க

நமக்கு நாமே திட்டம்: பங்களிப்புத் தொகை செலுத்த விரும்புவோா் தெரிவிக்கலாம்

அரியலூா் மாவட்டத்திலுள்ள ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்ட பணிகளுக்கு பொதுமக்களின் பங்குத் தொகை வரவேற்கப்படுகிறது என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை தெர... மேலும் பார்க்க

நதிகளுக்கான சா்வதேச நடவடிக்கை செயல் தின கொண்டாட்டம்

அரியலூா் அடுத்த சிறுவளூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பசுமைப் படை மாணவா்கள் சாா்பில் நதிகளுக்கான சா்வதேச நடவடிக்கை செயல் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியா... மேலும் பார்க்க

ஆண்டிமட வட்டத்தில் மாா்ச் 19, 20 -இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம்

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் வருவாய் வட்டத்தில் மாா்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மே... மேலும் பார்க்க