செய்திகள் :

பாபா பக்ருதீனை விசாரணைக்கு அழைத்து சென்ற என்ஐஏ

post image

மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டை இரண்டாவது முறையாக சோதனை செய்த என்ஐஏ அதிகாரிகள் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத்தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். இவரது வீட்டில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் சென்னையிலிருந்து ஒரு ஆய்வாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட அதிகாரிகள் கார் மற்றும் பாதுகாப்பு வேனில் வந்து சோதனையில் ஈடுபட்டனர்.

பாபா பக்ருதீன் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறபடுகிறது. இதனையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பாபா பக்ருதீன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறாரா மேலும், அவரது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உள்ள ஆவணங்கள், முக்கிய தடையங்கள் ஏதும் இருக்கிறதா என்பது குறித்தும் கைப்பேசி உரையாடல், தொலைப்பேசிகளை கைப்பற்றி என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

காலை 6 மணிக்கு தொடங்கிய சோதனை 10 மணிக்கு முடிந்ததையடுத்து பாபா பக்ருதீனை போலீஸார் பாதுகாப்புடன் சென்னைக்கு மேல் விசாரணைக்காக என்ஐஏ அதிகாரிகள் அழைத்து சென்றனர்.

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் பலி

போலீஸார் வேனில் இருந்தபடி பாபா பக்ருதீன், செய்தியாளர்களிடம் பேசியது, பழைய வழக்கிற்காக வந்து விசாரிப்பதாக தெரிகிறது. புதிய புகார் வழக்கா என கேட்டதற்கு என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை எனக் கூறினார். வீட்டிலிருந்து வங்கி கணக்கு புத்தகம், பென் டிரைவர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கூட்டம் நடத்துவதற்காக நான் அளித்திருந்த அனுமதி கடிதத்தின் நகல் ஆகியவற்றை மட்டும் அதிகாரிகள் எடுத்துக்கொண்டனர் என்றார்.

என்ஐஏ அதிகாரிகள் சோதனை காரணமாக மன்னார்குடி பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. அந்த பகுதியில் உள்ளூர் போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஏற்கெனவே,கடந்த 2021 ஆம் ஆண்டு பாபா பக்ரூதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி: அரசு அறிவிப்பு

சென்னை : ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்தவ ஆதிதிராவிடர் ஆகிய சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.பள்ளிப்படிப்புக்குப்பின் உ... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (பிப். 3) மாலையுடன் நிறைவு பெற்றது. மேலும் பார்க்க

தமிழகத்துக்கு 963 கி.மீ. 4 வழிச்சாலைகள்! புதிதாக 18 சுங்கச்சாவடிகள்!!

தமிழகத்தில் தற்போது 2,735 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளின் அளவு விரைவில் 3,698 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு அதிகரிக்கப்போவதாகவும், அதுபோல சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்றம் தகவல... மேலும் பார்க்க

'பிகார் பட்ஜெட்', 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' - ஜெயக்குமார்

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பிகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். 2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர... மேலும் பார்க்க

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் பலி

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்... மேலும் பார்க்க

திமுகவின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது: ஓபிஎஸ்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்ன... மேலும் பார்க்க