செய்திகள் :

'பிகார் பட்ஜெட்', 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' - ஜெயக்குமார்

post image

மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட், பிகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

2025 - 26 ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப். 1 அன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

அப்போது, தேர்தல் நடைபெறும் பிகார் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அதிகமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் பெயரைக்கூட உச்சரிக்கவில்லை என தமிழக அரசியல் கட்சியினர் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில், மத்திய பட்ஜெட், பிகார் மாநில பட்ஜெட்டாக உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

இதையும் படிக்க | மருத்துவக் கழிவு: வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உத்தரவு!

"பட்ஜெட்டில் திருக்குறள் வாசிக்கும் மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு நிதி வழங்கவில்லை. தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்காதது ஏமாற்றமளிக்கிறது. தமிழை மட்டும் வசிக்கிறீர்கள், தமிழ்நாட்டிற்கு என்ன செய்தீர்கள்?

அண்ணா கூறியதுபோல 'வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது' என்பது போலத்தான் உள்ளது" என்று கூறினார்.

பின்னர் திமுகவை விமர்சித்த அவர், "அண்ணாவின் பெயரை சொல்ல திமுகவுக்கு அருகதை இல்லை. அனைத்துக்கும் கருணாநியின் பெயரை வைக்கிறார்கள். அண்ணா பெயரை எதற்கும் வைப்பதில்லை.

மக்களை ஏமாற்ற, தேர்தலுக்கு மட்டும் அண்ணா, அண்ணா.. என்கிறார்கள். அறிவாலய விசாரணை அதிகாரி ஆர்.எஸ். பாரதி. ஈ.சி.ஆர். விவகாரத்தில் தமிழ்நாடே சிரிக்கிறது. அதில் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் யாருக்கும் அரசியல் பின்புலம் இல்லை என்றார்கள். அழுத்தம் காரணமாக காவல்துறை மாற்றி மாற்றிச் சொல்கிறார்கள்" என்றார்.

இதையும் படிக்க | ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பிரசாரம் நிறைவு!

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரசாரம் இன்று (பிப். 3) மாலையுடன் நிறைவு பெற்றது. மேலும் பார்க்க

தமிழகத்துக்கு 963 கி.மீ. 4 வழிச்சாலைகள்! புதிதாக 18 சுங்கச்சாவடிகள்!!

தமிழகத்தில் தற்போது 2,735 கிலோ மீட்டர் நீளமுள்ள நெடுஞ்சாலைகளின் அளவு விரைவில் 3,698 கிலோ மீட்டர் என்ற அளவுக்கு அதிகரிக்கப்போவதாகவும், அதுபோல சுங்கச் சாவடிகளின் எண்ணிக்கை 90 ஆக அதிகரிக்கும் என்றம் தகவல... மேலும் பார்க்க

பாபா பக்ருதீனை விசாரணைக்கு அழைத்து சென்ற என்ஐஏ

மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டை இரண்டாவது முறையாக சோதனை செய்த என்ஐஏ அதிகாரிகள் அவரை விசாரணைக்காக சென்னை அழைத்துச் சென்றனர்.திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத்தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன... மேலும் பார்க்க

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் பலி

நாமக்கல்லில் தண்ணீர் தொட்டியில் விழுந்து தாய், இரு மகன்கள் உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே கொளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிக்குமார்... மேலும் பார்க்க

திமுகவின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது: ஓபிஎஸ்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்ன... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: குழு அமைப்பதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது! - கனிமொழி

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் குழு அமைக்கப்போவதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறிவருகிறதேதவிர எந்த செயல்பாடும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க