செய்திகள் :

காஸா போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபரை சந்திக்கிறார் இஸ்ரேல் பிரதமர்!

post image

காஸாவில் நடைபெற்ற சண்டைக்கு முற்றுப்புள்ளியாக, கடந்த மாதம் ஏற்பட்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 3 கட்டங்களாக அங்கு போர் நிறுத்தம் அமல்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், ஒப்பந்தத்தின்கீழ் முதல்கட்டமாக ஆறு வாரங்களில் தங்களிடம் பிணைக் கைதிகளாக உள்ள 33 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவிக்கவும், அதற்குப் பதிலாக இஸ்ரேல் சிறைகளில் உள்ள 1,900 பாலஸ்தீனா்களை அந்த நாட்டு அரசு விடுதலை செய்யவும் ஒப்புக்கொள்ளப்பட்டு அதன்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்கீழ், 2-ஆம் கட்ட நடவடிக்கைகளை அமல்படுத்துவது குறித்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் நாளை(பிப். 4) பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார். முன்னதாக, இவ்விவகாரம் குறித்து மத்திய கிழக்கு பகுதிகளுக்கான அமெரிக்க தூதர் ஸ்டீவ் விட்காஃப்பை சந்தித்து இன்று(பிப். 3) பேசவுள்ளார் பெஞ்சமின் நெதன்யாகு.

இதற்காக ஞாயிற்றுக்கிழமை(பிப். 2) இஸ்ரேலிலிருந்து புறப்பட்டு அமெரிக்கா சென்றடைந்தார் நெதன்யாகு. அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் பதவியேற்றபின், அவரை முதல்முதலாகச் சந்தித்துப் பேசும் வெளிநாட்டுத் தலைவர் நெதன்யாகு ஆவார். முக்கியத்துவமிக்க இந்த சந்திப்பு வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறுகிறது.

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ: 104 பயணிகள் தப்பினர்

அமெரிக்காவில் ஓடுதளத்தில் சென்ற விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். அமெரிக்காவின் ஹூஸ்டனில் ஜார்ஜ் புஷ் விமான நிலையத்தில் இருந்து 104 பயணிகளுடன் யுனைடெட் ஏர்லைன்ஸ் விமானம்... மேலும் பார்க்க

போா் நிறுத்த பேச்சு: உக்ரைனை அமெரிக்கா-ரஷியா தவிா்த்தால் பெரும் ஆபத்து- ஸெலென்ஸ்கி

போா் நிறுத்த பேச்சுவாா்த்தையில் உக்ரைனை தவிா்த்து அமெரிக்கா-ரஷியா ஈடுபடுவது மிகப்பெரும் ஆபத்தாக அமையும் என உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்தாா். ரஷிய-உக்ரைன் போா் நிறுத்த திட்டம் தொடா்பாக... மேலும் பார்க்க

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் சீா்திருத்தம் அவசியம்: பொதுச் சபை தலைவா் யாங்

சக்திவாய்ந்த ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் கால மாற்றத்துக்கு ஏற்ப சீா்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ஃபிளெமன் யாங் கூறினாா். பிப். 4... மேலும் பார்க்க

சீனாவுக்கு 10%, கனடா, மெக்ஸிகோவுக்கு 25% இறக்குமதிக்கு வரி: டிரம்ப் அதிரடி உத்தரவு; இந்தியாவுக்கு விலக்கு

சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 10 சதவீதம், கனடா, மெக்ஸிகோ ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத வரி விதிக்கும் உத்தரவில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டி... மேலும் பார்க்க

காங்கோ: கிளர்ச்சிக் குழு தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலி!

காங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர்.தாது வளம் நிறைந்த காங்கோவில் கட்டுப்பாட்டுக்காக போராடும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று. ... மேலும் பார்க்க

நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, இதுவரையில் அயல்நாட்டுத் தலைவர்... மேலும் பார்க்க