செய்திகள் :

நட்பின் வலிமைக்கு சான்று: இஸ்ரேல் பிரதமருடன் டிரம்ப் சந்திப்பு!

post image

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்திக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.

அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றதிலிருந்து, இதுவரையில் அயல்நாட்டுத் தலைவர்கள் யாருடனும் டிரம்ப் சந்திப்பு மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் முதல் அயல்நாட்டு சந்திப்பாளராகவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார். அதுமட்டுமின்றி, முக்கியமான முடிவுகள் குறித்து விவாதிப்பதற்காக சந்திக்கவிருப்பதாகவும் கூறினார்.

இதுகுறித்து, நெதன்யாகு கூறியதாவது, ``அதிபராகப் பதவியேற்ற பிறகு ஓர் அயல்நாட்டு தலைவருடனான டிரம்ப்பின் முதல் சந்திப்பு என்னுடன்தான். இது இஸ்ரேல் - அமெரிக்க கூட்டணியின் வலிமைக்கு ஒரு சான்று என்று நினைக்கிறேன். மேலும், இது எங்கள் தனிப்பட்ட நட்பின் வலிமைக்கும் சான்றாகும்.

போரில் நாங்கள் எடுத்த முடிவுகள் ஏற்கெனவே மத்திய கிழக்கின் முகத்தை மாற்றியுள்ளன. நமது முடிவுகளும் நமது வீரர்களின் தைரியமும் வரைபடத்தை மீண்டும் வரைந்துள்ளன. ஆனால் அதிபர் டிரம்ப்புடன் நெருக்கமாகப் பணியாற்றினால், அதை இன்னும் சிறப்பாக மாற்றியமைக்க முடியும் என்று நம்புகிறேன். பாதுகாப்பை வலுப்படுத்தவும், அமைதி வட்டத்தை விரிவுபடுத்தவும், பலத்தின் மூலம் குறிப்பிடத்தக்க அமைதி சகாப்தத்தை அடையவும் முடியும் என்று நம்புகிறேன்’’ என்று தெரிவித்தார்.

இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தத்தைத் தொடர அழுத்தம் கொடுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப், கடந்த வாரம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை சந்திக்க அழைப்பு விடுத்தார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டிரம்ப்பை, பிப்ரவரி 4 ஆம் தேதியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சந்திக்கவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

இதையும் படிக்க:அந்த 'மாசு'பட்டவர் யார் என்று இதுவரை தெரியவில்லை?: தமிழிசை கேள்வி

காங்கோ: கிளர்ச்சிக் குழு தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலி!

காங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர்.தாது வளம் நிறைந்த காங்கோவில் கட்டுப்பாட்டுக்காக போராடும் நூற்றுக்கணக்கான கிளா்ச்சிக் குழுக்களில் எம்23-யும் ஒன்று. ... மேலும் பார்க்க

சூடான்: துணை ராணுவப்படை தாக்குதலில் 54 பேர் பலி!

சூடானில் துணை ராணுவப் படையினரின் தாக்குதலால் 54 பேர் பலியாகினர்.சூடானில் ஓம்டர்மேன் பகுதியில் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திறந்தவெளி சந்தையில் தாக்குதல் நடத்தப்பட்டதில், சுமார் 54 பேர் பலியாகினர்... மேலும் பார்க்க

போதைப்பொருள் புழக்கம்! வெள்ளை மாளிகை குற்றச்சாட்டுக்கு மெக்சிகோ எதிர்ப்பு!

குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபடும் இயக்கங்களுடன் மெக்சிகோ தொடர்பில் இருப்பதாகக் கூறிய வெள்ளை மாளிகையின் குற்றச்சாட்டை அந்நாட்டு அதிபர் கிளாடியா ஷீன்பாம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். வட அமெரிக்காவின் மூன... மேலும் பார்க்க

கனடா, மெக்சிகோ, சீனாவுக்கு புதிய வரி: டிரம்ப் அதிரடி!

மெக்சிகோ, கனடா மற்றும் சீனா ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.அதன்படி, கனடா மற்றும் மெக்சிகோவில் இருந்து இறக்குமதியாகும் பொருள்களுக்கு 25 சதவீத வரியும், சீ... மேலும் பார்க்க

பாக்.: மோதலில் 18 வீரா்கள், 23 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் 18 வீரா்கள், 23 பயங்கரவாதிகள் உயிரிழந்தனா். இது குறித்து ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,... மேலும் பார்க்க

வாஷிங்டன் விமான விபத்து: ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டி மீட்பு

அமெரிக்க தலைநகா் வாஷிங்டன் அருகே ரொனால்ட் ரீகன் விமான நிலையத்தில் விமானத்துடன் மோதி ஆற்றில் நொறுங்கி விழுந்த ஹெலிகாப்டரின் கருப்புப் பெட்டியும் கண்டெடுக்கபட்டது. ஏற்கெனவே, ஹெலிகாப்டா் மோதியதால் பொடோமே... மேலும் பார்க்க