காங்கோ: கிளர்ச்சிக் குழு தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலி!
சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகம்!
தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மாநில ஆய்வறிக்கை கூறுகிறது.
தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில், தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பது தெரிய வந்தது.
இந்த ஆய்வறிக்கை, தெலங்கானாவின் மொத்த மக்கள்தொகையான 3.70 கோடியில் 3.5 கோடி (96.9%) தனிநபர்களை உள்ளடக்கியது. மீதமுள்ள 3.1 சதவீதத்தினரில் (16 லட்சம் பேர்) சிலர் ஆய்வறிக்கையில் ஆர்வம் காட்டாததாகவும் கூறினர். தெலங்கானாவில் 1,15,78,457 எண்ணிக்கையில் குடும்பங்கள் உள்ளநிலையில், 1,12,15,134 குடும்பங்களிடம் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
தெலங்கானா மக்கள்தொகையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 17.43 சதவீதமாகவும், பழங்குடியினர் 10.45 சதவீதமாகவும், முஸ்லிம்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் 10.08 சதவீதமாகவும், இதர பிரிவினர் 13.31 சதவீதமாகவும், முஸ்லிம்களில் இதர பிரிவினர் 2.48 சதவீதம் என்ற நிலையிலும் உள்ளனர்.
இதையும் படிக்க:தேர்தல்களை கண்காணிக்க 'ஈகிள்' பெயரில் குழு அமைத்த காங்கிரஸ்!
தெலங்கானாவில் 61,84,319 பட்டியலினத்தவர்களும், 37,05,929 பட்டியலின பழங்குடியினரும், முஸ்லிம் சிறுபான்மையைத் தவிர பிற்படுத்தப்பட்ட பிரிவில் 1,64,09,179 பேரும், முஸ்லிம் சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட பிரிவில் 35,76,588 பேரும், முஸ்லிம் இதர பிரிவில் 8,80,424 பேரும் உள்ளதாக ஆய்வறிக்கையில் கூறியுள்ளனர்.
இந்த ஆய்வறிக்கை குறித்து, தெலங்கானா சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சிறப்பு கூட்டத்தொடரில் விவாதிக்கப்படும் என்று கூறிய தெலங்கானா குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் என். உத்தம் குமார் ரெட்டி, ``சாதிவாரி கணக்கெடுப்பின் மூலம் ஏழைகளுக்கும், பலவீனமான மற்றும் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்கும் சமூக, பொருளாதார, கல்வி, அரசியல் துறைகளில் தரவுசார்ந்த நலன் மற்றும் தரவுசார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும்’’ என்று தெரிவித்தார்.
தமிழகத்திலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அரசியல் தலைவர்களும் பலரும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.