செய்திகள் :

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

post image

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.

மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞாயிற்றுக்கிழமை காலை வந்தது.

அப்போது டெர்மினல் 2 வாகன நிறுத்துமிடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த கார் அங்கிருந்தவர்கள் மீது மோதியது.

இந்த சம்பவத்தில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர் என்று காவல்துறை அதிகாரி தெரிவித்தார். சஹார் காவல் நிலைய அதிகாரி கூறியதாவது, காரை நவி மும்பையில் வசிக்கும் பரசுராம்(34) ஓட்டி வந்தார்.

அதிவேகமாக வாகனம் ஓட்டியதற்காகவும், அலட்சியமாக இருந்ததற்காகவும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!

காயமடைந்த ஐந்து பேரில் 2 வெளிநாட்டினர் நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மூன்று விமான நிலைய பணியாளர்கள் கூப்பர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர.

விசாரணையின் ஒரு பகுதியாக கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஓட்டுநருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், விசாரணையும் நடைபெற்று வருகிறது.

சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகம்!

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மாநில ஆய்வறிக்கை கூறுகிறது.தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில... மேலும் பார்க்க

இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் புதிய வருமான வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆர்.கே.புரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்... மேலும் பார்க்க

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்ப... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்... மேலும் பார்க்க

திரிணமூல் காங்கிரஸ் மூத்த எம்எல்ஏ மரணம்

மாரடைப்பால் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமது மரணமடைந்தார். கலிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்எல்ஏ நசிருதீன் அகமதுவுக்கு சனிக்கிழமை இரவு 11:50 மணியள... மேலும் பார்க்க