செய்திகள் :

மகாராஷ்டிரம்: உலகளவில் அதிகபட்ச ஜிபிஎஸ் பாதிப்பு?

post image

இந்தியாவில் மகாராஷ்டிரத்திலும், மேற்கு வங்கத்திலும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் பரவிவரும் ஜிபிஎஸ் நோய்ப் பாதிப்பால் (Guillain-Barré Syndrome) உலகளவில் ஒரே நேரத்தில் அதிகப்படியானவர்கள் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் உருவெடுத்திருக்கிறது. அசுத்தமான தண்ணீரால் ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என கூறப்பட்டு வந்தநிலையில், புணேவில் சுகாதாரமற்ற மாசடைந்த நீரை தண்ணீர் லாரிகள் விற்றது தான் நோய் பரவக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.

பாக்டீரியா மற்றும் வைரஸ் பாதிப்புகள் ஜிபிஎஸ் நோய்ப் பரவலுக்கு பொதுவான காரணமாக உள்ளது. அசுத்தமான தண்ணீரில் காணப்படும் கேம்பிலோபாக்டர் ஜெஜூனி என்ற பாக்டீரியாவே இந்த தொற்றுநோய்க்கான காரணம் என்றும் கூறுகின்றனர். சுகாதாரமற்ற உணவுகளைச் சாப்பிடுவதால் ஏற்படும் பாக்டீரியா தொற்று உள்ளிட்டவற்றாலும் இந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

இதையும் படிக்க:கனடாவில் அமெரிக்க பொருள்களுக்கு 25% வரி: ஜஸ்டின் ட்ரூடோ பதிலடி!

பாக்டீரியா அல்லது வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டு, அதிலிருந்து மீண்டவர்களுக்கே அதிகளவில் ஜிபிஎஸ் பாதிப்பு ஏற்படுகிறது. நரம்பியல் பாதிப்பினால் தசைகளில் திடீர் உணர்வின்மை மற்றும் பலவீனம் இரண்டையும் ஏற்படுத்துகிறது. கை மற்றும் கால்களில் கடுமையான பலவீனம், தளர்வான அசைவுகள் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும்.தொடுதல், வெப்பநிலை மற்றும் வலி உணர்வுகள் உள்ள நரம்புகளின் செயல்பாட்டை முடக்கும்.

ஏஐ துறையில் தடம் பதிக்கும் இந்தியா?

செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியா விரைவில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியடையும் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.செயற்கை நுண்ணறிவு (AI) செயல்பாட்டில் இந்தியா தனிக்கவனம் செலுத்தி வருகிறது. நாடாளுமன்றத்தில் ... மேலும் பார்க்க

சாதிவாரி கணக்கெடுப்பில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிகம்!

தெலங்கானாவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் அதிக எண்ணிக்கையில் இருப்பதாக மாநில ஆய்வறிக்கை கூறுகிறது.தெலங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பை அம்மாநிலத்தின் திட்டமிடல் துறை மேற்கொண்டது. கணக்கெடுப்பின் முடிவில... மேலும் பார்க்க

இந்திரா காந்தி ஆட்சியில் ரூ. 12 லட்சம் சம்பளத்தில் ரூ. 10 லட்சம் வரியிலேயே போயிருக்கும்: பிரதமர் மோடி

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் புதிய வருமான வரி குறித்து பிரதமர் நரேந்திர மோடி புகழ்ந்தார்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, ஆர்.கே.புரத்தில் பிரதமர் நரேந்திர மோடி பிரசாரத்தில் ஈடுபட்டார்... மேலும் பார்க்க

மும்பை விமான நிலையத்தில் விபத்து: கார் மோதியதில் 5 பேர் காயம், ஓட்டுநர் கைது

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கார் மோதியதில் இரண்டு வெளிநாட்டவர்கள் உள்பட 5 பேர் காயமடைந்தனர்.மகாராஷ்டிர மாநிலம், மும்பை சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவரை இறக்கிவிடுவதற்காக சொகுசு கார் ஒன்று ஞா... மேலும் பார்க்க

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கு: முக்கிய குற்றவாளி கைது

பூபதிநகர் குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி மேற்கு வங்கத்தின்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தொண்டர்களைத் தாக்கும் பாஜகவினர்: ஆணையத்துக்கு கேஜரிவால் கடிதம்!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி களப்பணியில் ஈடுபட்டிருக்கும் ஆம் ஆத்மி தொண்டர்களை பாஜகவினர் மிரட்டுவதாகவும், தாக்குதலில் ஈடுபடுவதாகவும் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் குற்றம் சாட்... மேலும் பார்க்க