செய்திகள் :

பாமகவில் நிலவும் குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு: ராமதாஸ்

post image

விழுப்புரம்: பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னை, குழப்பங்களுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்று கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச. ராமதாஸ் தெரிவித்தார்.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரம் தோட்டத்தில் பாமக, வன்னியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் பாமக கெüரவத் தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, வன்னியர் சங்க மாநிலத் தலைவர் பு.தா.அருள்மொழி, மாநில துணைத் தலைவர்கள் ஆறுமுகம், தங்க. அய்யாசாமி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். கட்சியின் செயல்பாடுகள், வன்னியர் சங்க மகளிர் மாநாடு நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பின்னர், ராமதாஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் பூம்புகாரில் தமிழர் பெருவிழா நடத்தப்பட்டு வந்தது. பூம்புகாரில் நடைபெற்ற சீரமைப்புப் பணியால் தமிழர் திருவிழா நடத்தப்படவில்லை. வருகிற ஆகஸ்ட் 10}ஆம் தேதி பூம்புகாரில் வன்னியர் சங்க மகளிர் மாநில மாநாடு நடைபெறவுள்ளது. மாநாட்டுக் குழுத் தலைவராக பு.தா.அருள்மொழி செயல்படுவார்.

எல்லா பிரச்னைக்கும் தீர்வு உண்டு. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கும், குழப்பங்களுக்கும் தீர்வு ஏற்படும் என நம்புகிறேன். கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தை நடத்துவது தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும். நிர்வாகிகள் மாற்றப்படுவது கட்சியின் புதிய நடைமுறை இல்லை. நன்றாக செயல்படுபவர்களுக்கு கட்சியில் பொறுப்பு வழங்கப்படும். கட்சி தொடங்கப்பட்டதுமுதல் சுமார் 46 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். என் பின்புலத்தில் இருந்தபடி, என்னை யாரும் இயக்க முடியாது. பாமகவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம். பாமகவில் நிர்வாகிகள் போவதும், வருவதும் இயல்பானதுதான் என்றார் அவர்.

பேட்டியின்போது, பாமக தலைமை நிலையச் செயலர் அன்பழகன், தஞ்சை மாவட்டச் செயலர் ம.க.ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

ஓட்டுநர் இல்லாத 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ஒப்பந்தம்!

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாத 3 ரயில் பெட்டிகளைக் கொண்ட 32 மெட்ரோ ரயில்களை தயாரிக்க ரூ. 1,538.35 கோடி மதிப்பில் ஒப்பந்தம் வழங்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், முதல் ... மேலும் பார்க்க

திமுக வெற்று விளம்பரங்களுக்கு வீண் செலவு; ஆசிரியர்களுக்கு ஊதியம் இல்லை! - அண்ணாமலை

சென்னை பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததற்கு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக ஆட்சியில் வெற்று விளம்பரங்களுக்காக வீண் செலவுக... மேலும் பார்க்க

அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நிறைவு! ஆடிட்டர் குருமூர்த்தி - ராமதாஸ் ஆலோசனை!

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸை ஆடிட்டர் குருமூர்த்தி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.இந்த ஆலோசனையில் அதிமுக முன்னாள் மேயர் சைதை துரைசாமியும் கலந்துகொண்டுள்ளார்.பாமக நி... மேலும் பார்க்க

பெங்களூரு கூட்ட நெரிசலில் திருப்பூர் இளம் பெண் பலி!

பெங்களூருவில் நடைபெற்ற ஆர்சிபி வெற்றிப் பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி திருப்பூரைச் சேர்ந்த பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.18 ஆண்டுகளில் முதல்முறையாக ஆர்சிபி அணி ஐபிஎல் கோப்பையை வென்றதால், பெங்... மேலும் பார்க்க

ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு!

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்திக்கவுள்ளார்.உட்கட்சி பூசலுக்கு மத்தியில் ராமதாஸ் மற்றும் அன்புமணிக்கு இடையே மூத்த நிர்வாகிகள் சமரச பேச்சுவார்த்தை ந... மேலும் பார்க்க

எம்பிபிஎஸ், பிடிஎஸ் விண்ணப்பப் பதிவு நாளை தொடக்கம்

இளநிலை மருத்துவ படிப்புகளான எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு வெள்ளிக்கிழமை (ஜூன் 6) முதல் விண்ணப்பப் பதிவு தொடங்க உள்ளது. நிகழாண்டில் நீட் தோ்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்னரே விண்ணப்பப் பதிவு தொட... மேலும் பார்க்க