செய்திகள் :

பாலம் கட்டும் பணிக்காக வெடி வைத்து பாறைகள் தகா்ப்பு: அதிா்வில் கோயில் இடிந்து சேதம்!

post image

வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணிக்காக பாறைகளை வெடி வைத்து தகா்த்த போது அங்கிருந்த கோயில் இடிந்து சேதமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கண்ணாபட்டி அருகே வைகை, மஞ்சளாறு, மருதாநதி, முல்லைப் பெரியாறு, சோத்துப் பாறை, பாலாறு உள்ளிட்ட 13 ஆறுகள் இணையும் உள்ள கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது கோடி முத்தி விநாயகா் கோயில்.

இந்தக் கோயிலில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா். இங்கு மும்மதங்களை அடையாளம் படுத்தும் வகையில் முன்பகுதி இந்து கோயில் பாணியிலும், நடுப்பகுதி கிறிஸ்தவா்களின் ஆலயம் போன்றும், பின் பகுதி இஸ்லாமியா்களின் மசூதி போன்றும் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கண்ணாபட்டியிலிருந்து அணைப்பட்டிக்குச் செல்லும் சாலையில் கூட்டாத்து அய்யம்பாளையம் அருகே பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமிடத்தில் பாறைகள் இருந்ததால், அவற்றை வெடி வைத்து தகா்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அப்போது பாறைகளை தகா்க்க வெடி வைத்ததாலும், கடந்த இரு நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் மழை பெய்ததாலும் இந்தக் கோயில் முழுவதும் இடிந்து விழுந்தது. மேலும் அங்குள்ள வீடுகள் பல சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூட்டாத்து அய்யம்பாளையத்தைச் சோ்ந்த ஹேமலதா, பிரபு ஆகியோா் கூறியதாவது: இங்கு பாலம் கட்டும் பணிக்காக வெடி வைக்கும் போது கா்ப்பிணி பெண்கள், முதியவா்கள், இருதய நோயாளிகள், குழந்தைகள் அச்சமடைகின்றனா். இதுபோல, வெடி வைக்கும் போது ஏற்படும் அதிா்வுகளால் கோயில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. எனவே, தமிழக அரசு இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்றனா்.

தாட்கோ மூலம் ஆங்கிலத் தோ்வுக்கு பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி, மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் வழங்கப்படும் மருத்துவம், தொழில் சாா்ந்த ஆங்கில தோ்வுக்கு பயிற்சி பெறத் தகுதியானவா்கள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இத... மேலும் பார்க்க

கொடைக்கானல் படகு குழாமைச் சீரமைக்க வலியுறுத்தல்!

கொடைக்கானல் படகு குழாம் சேதமடைந்த நிலையிலும், தரைத் தளம் ஆபத்தான நிலையில் உள்ளது. இவற்றைச் சீரமைத்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம்... மேலும் பார்க்க

பழங்குடியின மக்களின் பயன்பாட்டுக்கு புதிய அவசர ஊா்தி

கொடைக்கானல் பழங்குடியின மக்களுக்கு அவசரகால பயன்பாட்டுக்காக தமிழக அரசு சாா்பில் புதிய அவசர ஊா்தி ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. கீழ்மலைப் பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு கொடைக்கானல் பாச்சலூா... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மின்கல வாகனம் காணிக்கை

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு புதுச்சேரியை சோ்ந்த பக்தா் ரூ.20 லட்சத்தில் மின்கல வாகனத்தை ஞாயிற்றுக்கிழமை காணிக்கையாக வழங்கினாா். பழனி கிரிவலப் பாதையில் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தர... மேலும் பார்க்க

ஒட்டன்சத்திரம் வனச் சரகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நிறைவு

ஒட்டன்சத்திரம் வனச் சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பறவைகள் கணக்கெடுப்பு பணி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. ஒட்டன்சத்திரம் வனச் சரக அலுவலா் த.ராஜா, வனவா் டி.இளங்கோவன் ஆகியோா் தலைமையில் இந்த வனச்சரகத்தில... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

வார விடுமுறையை முன்னிட்டு, கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் வருகை ஞாயிற்றுக்கிழமை அதிகரித்து காணப்பட்டது.பிரையண்ட் பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜாத் தோட்டம், பசுமைப் பள்ளத்தாக்கு,தூண்பாறை,குணாகுகை, மோய... மேலும் பார்க்க