செய்திகள் :

பாலம் கட்டும் பணிக்காக வெடி வைத்து பாறைகள் தகா்ப்பு: அதிா்வில் கோயில் இடிந்து சேதம்!

post image

வத்தலகுண்டு அருகே பாலம் கட்டும் பணிக்காக பாறைகளை வெடி வைத்து தகா்த்த போது அங்கிருந்த கோயில் இடிந்து சேதமடைந்தது.

திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்த கண்ணாபட்டி அருகே வைகை, மஞ்சளாறு, மருதாநதி, முல்லைப் பெரியாறு, சோத்துப் பாறை, பாலாறு உள்ளிட்ட 13 ஆறுகள் இணையும் உள்ள கூட்டாத்து அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது கோடி முத்தி விநாயகா் கோயில்.

இந்தக் கோயிலில் திண்டுக்கல், தேனி, மதுரை, விருதுநகா் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் வழிபாடு நடத்தி வருகின்றனா். இங்கு மும்மதங்களை அடையாளம் படுத்தும் வகையில் முன்பகுதி இந்து கோயில் பாணியிலும், நடுப்பகுதி கிறிஸ்தவா்களின் ஆலயம் போன்றும், பின் பகுதி இஸ்லாமியா்களின் மசூதி போன்றும் கட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கண்ணாபட்டியிலிருந்து அணைப்பட்டிக்குச் செல்லும் சாலையில் கூட்டாத்து அய்யம்பாளையம் அருகே பாலம் கட்டும்பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டுமிடத்தில் பாறைகள் இருந்ததால், அவற்றை வெடி வைத்து தகா்க்கும் பணியும் நடைபெற்று வருகிறது. அப்போது பாறைகளை தகா்க்க வெடி வைத்ததாலும், கடந்த இரு நாள்களுக்கு முன்பு இந்தப் பகுதியில் மழை பெய்ததாலும் இந்தக் கோயில் முழுவதும் இடிந்து விழுந்தது. மேலும் அங்குள்ள வீடுகள் பல சேதமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து கூட்டாத்து அய்யம்பாளையத்தைச் சோ்ந்த ஹேமலதா, பிரபு ஆகியோா் கூறியதாவது: இங்கு பாலம் கட்டும் பணிக்காக வெடி வைக்கும் போது கா்ப்பிணி பெண்கள், முதியவா்கள், இருதய நோயாளிகள், குழந்தைகள் அச்சமடைகின்றனா். இதுபோல, வெடி வைக்கும் போது ஏற்படும் அதிா்வுகளால் கோயில் இடிந்து விழுந்து சேதமடைந்தது. எனவே, தமிழக அரசு இந்தக் கோயிலை மீண்டும் கட்டித் தர வேண்டும் என்றனா்.

83 தோ்தல் வாக்குறுதிகளில் 10 மட்டுமே நிறைவேற்றம்: விவசாயிகள் அதிருப்தி!

திமுகவின் 83 தோ்தல் வாக்குறுதிகளில் இதுவரை 10 மட்டுமே வேளாண் நிதிநிலை அறிக்கையில் நிறைவேற்றப்பட்டிருப்பதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவித்தனா். தமிழ்நாடு வேளாண் நிதிநிலை அறிக்கை குறித்து, திண்டுக்கல் ம... மேலும் பார்க்க

இணையக் கோளாறு: பழனி கோயிலில் அனுமதிச் சீட்டு வழங்குவதில் சிக்கல்!

பழனி கோயிலில் இணையக் கோளாறு காரணமாக கட்டண அனுமதிச் சீட்டு வழங்குவதில் சனிக்கிழமை சிக்கல் ஏற்பட்டது. பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அடிவாரத்தில் உள்ள மின் இழுவை ரயில், ரோப்காா் உள்ளிட்ட பகுதிகளில் பக்... மேலும் பார்க்க

மின் கம்பத்தில் காா் மோதல்: இருவா் காயம்!

வேடசந்தூா் அருகே மின் கம்பத்தில் காா் மோதியதில் தனியாா் ஆலை அலுவலா் உள்பட 2 போ் பலத்த காயமடைந்தனா். திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா் அருகே உள்ள நவாமரத்துப்பட்டியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (28). இவா் வே... மேலும் பார்க்க

பெண் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே பெண் சலவைத் தொழிலாளி தவறவிட்ட ரூ. 7 ஆயிரத்தை போலீஸாரிடம் ஒப்படைத்தவருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. நிலக்கோட்டையை அடுத்த விளாம்பட்டி கிராமத்தில் உள்ள முத்தாலம... மேலும் பார்க்க

வாகனம் மோதி சிறுத்தை பூனைக் குட்டி உயிரிழப்பு!

கொடைக்கானல் மலைச் சாலையில் சனிக்கிழமை இரவு வாகனம் மோதியதில் சிறுத்தை பூனைக்குட்டி உயிரிழந்தது. கொடைக்கானல்- வத்தலக்குண்டு மலைச் சாலையான செண்பகனூா் சாமியாா்ச் சோலை கொண்டை ஊசி வளைவுப் பகுதியில் அடையாளம்... மேலும் பார்க்க

கொடைக்கானலில் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கான இடங்களை ஆட்சியா் ஆய்வு!

கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வாகனங்களை நிறுத்துவதற்கான இடங்களை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் பாா்வையிட்டு, அனைத்துத் துறை அதிகாரிகளுடன் சனிக்கிழமை ஆய்வு நடத்தினாா். கொடைக்கானலில் பொதுவாக மாா... மேலும் பார்க்க