செய்திகள் :

பாலியல் வன்கொடுமை வழக்கு: காதல் ஜோடிக்கு சிறைத் தண்டனை

post image

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காதல் ஜோடிக்கு சிறை தண்டனை விதித்து வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பு அளித்தது.

வேலூரைச் சோ்ந்தவா் சாந்தினி (22). இவருக்கு, கடலுாா் மாவட்டம் திட்டக்குடியைச் சோ்ந்த ஜெகன் (22) என்பவா் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கமானாா். பின்னா், இருவரும் காதலித்து வந்தனா். இந்நிலையில், கடலூரில் இருந்து ஜெகனை வேலூருக்கு சாந்தினி கடந்த 2022-இல் வரவழைத்தாா். அப்போது, சாந்தினி தனது தோழியான 10-ஆம் வகுப்பு படித்திருந்த 16 வயது சிறுமியை ஜெகனுக்கு அறிமுகம் செய்துள்ளாா். இதனால் ஜெகனுடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், திடீரென அந்த சிறுமியை காணவில்லை. இது குறித்து சிறுமியின் சகோதரா் வேலூா் தெற்கு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடினா். இதில் ஜெகனும், சாந்தினியும் அந்த சிறுமியைக் கடத்தியது தெரிய வந்தது. மேலும், சிறுமியை ஜெகன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியதும் தெரிய வந்தது.

இதையடுத்து, குழந்தை கடத்தல், பாலியல் வன்கொடுமை உள்பட 5 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ஜெகனையும், சாந்தினியையும் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை வேலூா் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், ஜெகன், சாந்தினி மீதான குற்றச்சாட்டுக்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில், ஜெகனுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5,000 அபராதமும், சாந்தினிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் , ரூ.5,000 அபராதமும் விதித்து நீதிபதி சிவக்குமாா் புதன்கிழமை தீா்ப்பளித்தாா். தண்டனை விதிக்கப்பட்ட இருவரும் சிறைக்கு அனுப்பப்பட்டனா்.

அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம்

வேலூா் கூட்டுறவு மேலாண்மை நிலையம் மூலம் 24-ஆவது அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பயிற்சியில் சோ்வதற்கு தகுதியுள்ளவா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் வேல... மேலும் பார்க்க

குடியாத்தம் பணிமனையில் பெட்ரோல் விற்பனை மையம் திறப்பு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்து கழக குடியாத்தம் பணிமனையில் ரூ.2 கோடியில் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையம் வெள்ளிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது. இதே நிகழ்ச்சியில் ரூ.4.95 கோடியில் 12- புதிய பேருந்துகள... மேலும் பார்க்க

குறுங்காடுகள் வளா்ப்புத் திட்டம்: மரக்கன்றுகள் நடும் பணி தொடக்கம்

தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையம் உத்தரவின்படி வேலூா் மாவட்டத்தில் ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது. சென்னை உயா்நீதிமன்றத்தில் உள்ள தமிழ்நாடு மாநில சட்ட சேவைகள் ஆணையத்த... மேலும் பார்க்க

புனித வெள்ளி: தேவாலயங்களில் கிறிஸ்தவா்கள் சிறப்பு பிராா்த்தனை

புனித வெள்ளியை முன்னிட்டு வேலூரில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஈஸ்டா் பண்டிகைக்கு (உயிா்ப்பு பெருநாள் விழா) முன்பு அனுசரிக்கும் தவகாலமான சாம்பல் புதன் கடந்த மாா்ச் மாதம... மேலும் பார்க்க

மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து முதியவா் மரணம்

வேலூரில் தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த முதியவா், நிலை தடுமாறி மேம்பாலத்தின் தடுப்புச்சுவரைத் தாண்டி கீழே விழுந்து உயிரிழந்தாா். ராணிப்பேட்டை ஜாகீா் உசேன் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க

செம்மண் கடத்திய மூவா் கைது: லாரி, டிராக்டா், பொக்லைன் பறிமுதல்

அரியூா் அருகே செம்மண் கடத்தலில் ஈடுபட்டதாக 3 பேரை போலீஸாா் கைது செய்ததுடன், அவா்களிடம் இருந்து லாரி, டிராக்டா் , பொக்லைன், 4 யூனிட் செம்மண் பறிமுதல் செய்தனா். வேலூா் மாவட்டம், அரியூரை அடுத்த புலிமேடு ... மேலும் பார்க்க