செய்திகள் :

பால் தாக்கரே மனைவி சிலை மீது சிவப்பு பெயிண்ட்டை ஊற்றிய மர்ம நபர்; மும்பை தாதர் பகுதியில் பதற்றம்

post image

மும்பை தாதர் சிவாஜி பார்க் மைதான வளாகத்திற்கு வெளியில் ஒரு நுழைவு வாயிலில் மறைந்த சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மனைவி மீனாதாய் தாக்கரேயின் மார்பளவு சிலை இருக்கிறது.

சிவாஜி பார்க் எப்போதும் பிஸியாகவே காணப்படும். பால்தாக்கரே இறந்தபோது அவரது உடல் சிவாஜி பார்க்கில்தான் தகனம் செய்யப்பட்டது.

பால்தாக்கரேயின் நினைவுச் சின்னமும் இதே சிவாஜி பார்க் பகுதியில் தான் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு மேயர் பங்களாவாக இருந்த இடம் பால்தாக்கரேயின் நினைவுச் சின்னமாக மாற்றப்பட்டுள்ளது.

இன்று காலை மர்ம நபர் யாரோ தாதர் சிவாஜி பார்க்கில் இருந்த மீனாதாய் தாக்கரே சிலை மீது சிவப்பு நிறப் பெயிண்டை ஊற்றியுள்ளார்.

இது குறித்து கேள்விப்பட்டதும் சிவசேனா(உத்தவ்) தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் விரைந்து வந்து சிவப்பு பெயிண்ட்டை அகற்றி சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இது குறித்து கேள்விப்பட்டதும் அருகில் வசிக்கும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே நேரில் சென்று நிலவரத்தை ஆய்வு செய்தார். உத்தவ் தாக்கரேயும் நேரில் சென்று பார்வையிட இருக்கிறார்.

வழக்கமாக சம்பவ இடத்தில் எப்போதும் போலீஸார் நிற்பது வழக்கம். ஆனால் சம்பவத்தின் போது எப்படி போலீஸார் இல்லாமல் போனார்கள் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அப்பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது சிலை அருகில் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நிற்பது தெரிய வந்துள்ளது.

அந்த நபர் யார் என்று அடையாளும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவத்தால் தாதர் பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

50,000 தேனீக்களுடன் நட்பு; உடலை மூடிய தேனீக்கள், ஆனாலும் கொட்டவில்லை - உ.பியில் நடந்த விநோத சம்பவம்

தேனீக்கள் என்றாலே, நம்மில் பலருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். அதன் கொடுக்குகள் ஏற்படுத்தும் வலியும், வீக்கமும் இதற்குக் காரணம். தேனீயைப் பார்த்தாலே தெறித்து ஓடுபவர்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான தேனீ... மேலும் பார்க்க

Mumbai Monorail: ``சேவையை மேம்படுத்த தற்காலிகமாக மோனோ ரயிலை நிறுத்துகிறோம்'' - மஹாராஷ்டிரா அரசு

இந்தியாவில் மும்பையில் மட்டுமே மோனோ ரயில் சேவை அமலில் உள்ளது. மும்பை செம்பூரில் இருந்து ஜேக்கப் சர்க்கிள் வரை இந்த மோனோ ரயில் இயக்கப்படுகிறது. ஆனால், இதற்கு மக்களிடையே போதிய வரவேற்பு இல்லை. இதனால் மாந... மேலும் பார்க்க

அமிதாப் பச்சன் : ரத்ததானம் பெற்றதில் வைரஸ் தொற்று, 25% கல்லீரலுடன் வாழ்கிறேன்

பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தனது 82 வயதிலும் இன்னும் ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கிறார். திரைப்படங்கள், கோன்பனேகா குரோர்பதி டிவி நிகழ்ச்சி, விளம்பரங்கள், சோசியல் மீடியா என்று தன்னை எப்போதும் உற்சாகமாக... மேலும் பார்க்க

Uttar Pradesh: `இரு முறை கடித்தால் முகாம்களில் அடைப்பு' - தெருநாய் பிரச்னைக்கு புதிய நெறிமுறைகள்

தெருநாய்கள் தொடர்பாக சமீபத்தில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகள் பெரும் சர்ச்சையை கிளப்பின. டெல்லியில் தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், பின்னர் தனது உத்தரவை திருத... மேலும் பார்க்க

Pakistan: 15 வயதில் மாரடைப்பு; பாகிஸ்தான் மக்களை சோகத்தில் ஆழ்த்திய குழந்தை பிரபலத்தின் மரணம்!

பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நட்சத்திரமான உமர் ஷா என்ற சிறுவன், 15 வயதில் திடீர் மாரடைப்பு (cardiac arrest) காரணமாக உயிரிழந்த செய்தி, அந்நாட்டு பொழுதுபோக்கு உலகையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது. சமூக... மேலும் பார்க்க

குட்டி சிம்பன்சிக்கு ரீல்ஸ் காட்டத் தடை- பூங்காவின் விநோத அறிவிப்பு; பின்னணி என்ன?

மனிதர்களைப் போலவே, விலங்குகளும் மொபைல் ஃபோன்களுக்கு அடிமையாகும் பழக்கம் சீனாவில் அதிகரித்து வருவதாகப் பலரும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.ஷாங்காய் வனவிலங்கு பூங்காவில் உள்ள "டிங் டிங்" என்ற இரண்டு வய... மேலும் பார்க்க