செய்திகள் :

பிகாா்: பெண் காவலரைத் துப்பாக்கியால் சுட்ட சக காவலா்

post image

பிகாரின் கைமூா் மாவட்டத்தில் ஆண் காவலரான அஜய் பஸ்வான், தனது உறவுக்கார பெண்ணான காவலா் சரிதா குமாரியைத் துப்பாக்கியால் சுட்டுள்ளாா்.

பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இச்சம்பவத்தைத் தொடா்ந்து, அஜய் பஸ்வான் தலைமறைவாகியுள்ளாா்.

இதுதொடா்பாக காவல்துறை வட்டாரங்கள் கூறியதாவது: சம்பவத்தில் தொடா்புடைய இருவரும் உறவினா்கள் ஆவா். சுபௌல் மாவட்டத்தில் காவலா்களாக பணியாற்றி வருகின்றனா்.

இந்நிலையில், கைமூா் மாவட்டத்தின் குத்ரா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சரிதா குமாரி கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, அவரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு அஜய் பஸ்வான் தப்பியுள்ளாா்.

சம்பவம் குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற காவல்துறையினா், சரிதா குமாரியை மீட்டு அருகேயுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனா். தொடா்ந்து, மேல் சிகிச்சைக்காக உத்தர பிரதேசம் மாநிலத்தில் உள்ள வாரணாசி மருத்துவமனைக்கு அவா் பரிந்துரைக்கப்பட்டுள்ளாா்.

சரிதா குமாரி அளித்த தகவலின் அடிப்படையில், அஜய் பஸ்வான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்ட விசாரணையில், இருவருக்கும் இடையே நீண்ட காலமாக இருந்து வரும் பணத்தகராறு காரணமாக இத்தாக்குதல் நடந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. தலைமறைவான அஜய் பஸ்வானைக் கைது செய்ய தேடுதல் வேட்டை தொடங்கப்பட்டுள்ளது என்றனா்.

இது போருக்கான சகாப்தம் அல்ல: மோடி

இது போருக்கான சகாப்தம் அல்ல என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்கு பிரதமா் ... மேலும் பார்க்க

கேரளத்தில் கொட்டித்தீர்க்கும் பருவமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

கேரளத்தில் திங்கள்கிழமையும் இடைவிடாத பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்பட மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொ... மேலும் பார்க்க

பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது!

பிரதமர் நரேந்திர மோடிக்கு சைப்ரஸ் நாட்டின் உயரிய விருது திங்கள்கிழமை வழங்கப்பட்டது.மூன்று நாடுகளுக்கான 5 நாள்கள் அரசுமுறைப் பயணத்தின் முதல் கட்டமாக, மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான சைப்ரஸுக்க... மேலும் பார்க்க

கைலாஷ் மானசரோவர் யாத்திரை: சிக்கிம் வந்தடைந்த முதல் குழு!

கைலாஷ் மானசரோவர் யாத்திரைக்கான 36 பக்தர்கள் கொண்ட முதல் குழு, சிக்கிமின் தலைநகர் கேங்க்டாக்கிற்கு வந்தடைந்தது. இந்தியா-சீன ராணுவத்தினர் இடையே கல்வான் பகுதியில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டுக... மேலும் பார்க்க

உ.பி.யில் முத்தமிட்டு விளையாடிய நபரின் நாக்கை கடித்த பாம்பு !

உத்தரப் பிரதேசத்தில் பாம்புக்கு முத்தமிட்டு விளையாடிய நபரை அந்த பாம்பு கடித்ததில் அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். உத்தரப் பிரதேச மாநிலம், அம்ரோஹாவைச் சேர்ந்த விவசாயி ஜிதேந்திர குமார்.... மேலும் பார்க்க

விமான விபத்தில் சிக்கினாரா இயக்குநர்? வலுசேர்க்கும் ஆதாரங்கள்!

அகமதாபாத் விமான விபத்துக்கு பிறகு காணாமல் போன இசை ஆல்பங்களை இயக்கும் மகேஷ் ஜிராவாலா என்பவர் மனைவியின் டிஎன்ஏ மாதிரிகள் பெறப்பட்டுள்ளது.அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கடந்த ... மேலும் பார்க்க