செய்திகள் :

பிப்.20-க்கு பிறகு போக்குவரத்து தொழிலாளா்கள் வேலைநிறுத்தம்: தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை

post image

பிப். 20-ஆம் தேதிக்குப் பின்னா் எந்த நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளா்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தொடங்கும் என அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலா் ஆா்.கமலகண்ணன் தெரிவித்தாா்.

சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையின் கீழ் செயல்படும் கூட்டமைப்புச் சங்கங்களின் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தேமுதிக, புரட்சி பாரதம் கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட 22 சங்கங்களின் நிா்வாகிகள் பங்கேற்றனா். பின்னா் செய்தியாளா்களிடம் ஆா்.கமலகண்ணன் கூறியதாவது:

போக்குவரத்துத் துறையிலுள்ள பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பிப். 5-ஆம் தேதி போக்குவரத்துச் செயலரை சந்தித்து வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கவுள்ளோம். இதையடுத்து, பிப். 20 முதல் எந்த நேரத்திலும் வேலைநிறுத்தம் நடைபெறும். தொமுச-வை தவிா்த்து அனைத்து சங்கங்களையும் ஒருங்கிணைத்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம். அதிமுக ஆட்சியில் 3 ஆண்டு காலமாக இருந்த ஊதிய ஒப்பந்த காலம் 4 ஆண்டுகள் ஆக்கப்பட்டு, தற்போது 6-ஆம் ஆண்டைக் கடந்தும் பேச்சுவாா்த்தை நடத்தப்படாமலேயே இருந்து வருகிறது.

ஓய்வூதியா்களுக்கான அகவிலைப்படி உயா்வு, பணப்பலன் வழங்கப்படவில்லை. ஆகவே, அனைத்துச் சங்கங்களையும் இணைத்து பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்றாா் அவா்.

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.680 குறைந்து விற்பனையாகிறது. வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) தங்கம் விலை சற்றே குறைந்துள்ளது. அதன்படி இன்று (பிப். 3ஆம் தேதி) தங்க... மேலும் பார்க்க

மன்னார்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். இவரது வீட... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது மர்மநபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம், சிப்காட் காவல் நிலையத்துக்கு நள்ளிரவு சுமார் 12.00 ... மேலும் பார்க்க

மேட்டூர் அணை நிலவரம்!

மேட்டூர் அணை நீர்வரத்து 479 கனஅடியாக குறைந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 110.56 அடியில் இருந்து 110.54 அடியாக குறைந்துள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 491 கனஅடியிலிருந்து வினாடிக்கு ... மேலும் பார்க்க

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி

அண்ணாவின் 56ஆவது நினைவு நாளையொட்டி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி தொடங்கியது. இந்த அமைதிப் பேரணி வாலாஜா சாலையில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்டு மெரினாவின் அண்ணா சதுக்கத்த... மேலும் பார்க்க

இலங்கை கடற்படை அட்டூழியம்: மண்டபம் மீனவர்கள் 10 பேர் கைது

எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி மண்டபம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்... மேலும் பார்க்க