செய்திகள் :

மன்னார்குடியில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

post image

மன்னார்குடியில் பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் இரண்டாவது முறையாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி ஆசாத் தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன் மகன் பாபா பக்ருதீன். இவரது வீட்டில் திங்கள்கிழமை காலை முதல் சென்னையிலிருந்து ஒரு ஆய்வாளர் தலைமையில் மூன்று பேர் கொண்ட என்ஐஏ அதிகாரிகள், சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

பாபா பக்ருதீன் தடை செய்யப்பட்ட கிலாபத் இயக்கத்தில் உறுப்பினராக இருப்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் பாபா பக்ருதீன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறாரா மேலும் இவரது வீட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தில் உள்ள ஆவணங்கள், முக்கிய தடையங்கள் எதுவும் இருக்கிறதா என்பது குறித்தும் அவரது கைப்பேசி உரையாடல் மற்றும் தொலைப்பேசிகளை கைப்பற்றி என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

ஏற்கெனவே, கடந்த 2021 ஆம் ஆண்டு பாபா பக்ருதீன் வீட்டில் என்ஐஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அதனைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீச்சு

என்ஐஏ அதிகாரிகளின் சோதனையையொட்டி அவரது வீட்டு வாசலில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால், மன்னார்குடியில் காலை முதல் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

இதனிடையே பயங்கரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த வழக்கு தொடர்பாக, சென்னையில் மூன்று இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.

திமுகவின் ஆட்சி கனவு ஒருபோதும் பலிக்காது: ஓபிஎஸ்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சி அமைப்போம் என்ற திமுகவின் கனவு வருகின்ற தேர்தலில் பலிக்காது என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.முன்னாள் முதல்வர் அண்ணாவின் 56-வது நினைவு நாளையொட்டி சென்ன... மேலும் பார்க்க

மீனவர்கள் கைது: குழு அமைப்பதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறி வருகிறது! - கனிமொழி

தமிழக மீனவர்கள் கைது விவகாரத்தில் குழு அமைக்கப்போவதாக மத்திய அரசு பல ஆண்டுகளாக கூறிவருகிறதேதவிர எந்த செயல்பாடும் இல்லை என திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார். தில்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாள... மேலும் பார்க்க

காரைக்கால் மீனவர்கள் 9 பேர் விடுதலை, ஒருவருக்கு சிறை!

காரைக்கால் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி 10 காரைக்கால் மீனவர்களை இலங்கை கடற்படை கடந்த ஜன.8ஆம் தேதி கைது செய்தது. இவர்களில் 9 ப... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவியை நீக்கக்கோரிய மனு தள்ளுபடி!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நீக்கக்கோரிய மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்து நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் த... மேலும் பார்க்க

மருத்துவக் கழிவு: வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட உத்தரவு!

கேரளத்திலிருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டுவரும் வாகனங்களை பறிமுதல் செய்து ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவுகளை கொண்டுவ... மேலும் பார்க்க

காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை- இபிஎஸ் கண்டனம்

காவல் நிலையம் கூட பாதுகாப்பான இடம் இல்லை என்ற நிலையில் சட்டம் ஒழுங்கு உள்ளது என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ராணிப்பேட்டை சிப்காட் காவல... மேலும் பார்க்க