செய்திகள் :

கும்பமேளா விவகாரம்: மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு!

post image

மகா கும்பமேளா விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளி நடப்பு செய்தனர்.

மகா கும்பமேளா நெரிசலில் பலி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். திமுக, காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் இன்றைய அவை நடவடிக்கைக்கு 267 விதியின் கீழ் 9 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மகா கும்பமேளா விவகாரம் உள்பட மனுக்களில் குறிப்பிட்டுள்ள பிரச்னைகள் குறித்து இன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மக்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கத்துக்கு இடையே அவை நடவடிக்கை!

ஆனால், மகா கும்பமேளா விவகாரத்தை உடனே விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்து திமுக, காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம், சமாஜவாதி, ஆம் ஆத்மி, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள் வெளிநடப்பு செய்தனர்.

அதேபோல், மகா கும்பமேளா விவகாரங்கள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் மக்களவையில் தொடர்ந்து முழக்கம் எழுப்பி வரும் நிலையில் அவை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்!

பிப். 20 முதல் எந்நேரத்திலும் போக்குவரத்துத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அண்ணா தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.சென்னையில் அண்ணா தொழிற்சங்கத்தின் தலைமையில் கீழ் செயல்படும் கூட்டமைப்பு சங்க... மேலும் பார்க்க

பயங்கரவாத தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலி! குடும்பத்தினர் படுகாயம்!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு தாக்குதலில் முன்னாள் ராணுவ வீரர் பலியானார். குல்கம் மாவட்டத்தின் பெஹிபாக் பகுதியில் இன்று (பிப்.1) மதியம் ஓய்வுப் பெற்ற முன்னாள் ராணு... மேலும் பார்க்க

கார் வெடி குண்டு தாக்குதலில் 14 பெண்கள் உள்பட 15 பேர் பலி!

சிரியாவின் வடக்கு மாகாணத்தில் கார் வெடி குண்டு தாக்குதலில் 15க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சிரியாவின் அலெப்போவின் வட கிழக்கிலுள்ள மன்பிஜ் நகரத்தில் இன்று (பிப்.3) விவசாய தொழி... மேலும் பார்க்க

நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் கைது! விடியோ வைரல்!

ஜம்மு காஷ்மீரில் நிலத் தகராறில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.ஜம்முவின் டோமானா காவல் நிலையக் கட்டுப்பாட்டிலுள்ள லாலே டா பாக் பகுதியிலுள்ள 21.5 மர்லா அளவிலான நிலம் ... மேலும் பார்க்க

பாம்பன் பால திறப்பு விழா: தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

பாம்பன் புதிய பால திறப்பு விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம்-ராமேசுவரம் தீவுப் பகுதியை இணைக்கும் வகையில், பாம்பன் கடல் பகுதி... மேலும் பார்க்க

பிப். 10-ல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்!

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் பிப். 10 ஆம் தேதி தமிழகக் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.சென்னை தலைமைச் செயலகத்தில் பிப்.10 ஆம் தேதி 11 மணியளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் தமிழக பட்ஜ... மேலும் பார்க்க