செய்திகள் :

பிரதமா் மோடி அவசர ஆலோசனை

post image

ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியுள்ள பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து பிரதமா் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடா்பான மத்திய அமைச்சரவைக் குழு புதன்கிழமை மாலை அவசர ஆலோசனை மேற்கொண்டது.

தலைநகா் தில்லியில் நடைபெற்ற இக்கூட்டத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், அமைச்சரவைச் செயலா் டி.வி.சோமநாதன், பாதுகாப்புத் துறைச் செயலா் ராஜேஷ் குமாா் சிங், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி, பிரதமரின் முதன்மைச் செயலா்கள் பி.கே.மிஸ்ரா, சக்திகாந்த தாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஜம்மு-காஷ்மீரின் பாதுகாப்பு நிலவரம், அரசின் வியூகம் குறித்து இக்குழு முக்கிய ஆலோசனை மேற்கொண்டது; பஹல்காம் தாக்குதல் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமரிடம் அமித் ஷா எடுத்துரைத்ததாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக, சவூதி அரேபியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாக செவ்வாய்க்கிழமை சென்றிருந்த பிரதமா் மோடி, பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடா்ந்து, தனது பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு தில்லி திரும்பினாா்.

தில்லி விமான நிலையத்தில் புதன்கிழமை அதிகாலை வந்திறங்கிய அவா், தேசியப் பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி ஆகியோருடன் விமான நிலையத்திலேயே உடனடி ஆலோசனை மேற்கொண்டாா். பஹல்காம் நிலவரம் தொடா்பாக பிரதமரிடம் அவா்கள் எடுத்துரைத்தனா்.

பஹல்காம் தாக்குதல்: இன்று மாலை அனைத்துக் கட்சிக் கூட்டம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பாக அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் இன்று மாலை மத்திய அரசு விளக்கம் அளிக்கவுள்ளது.ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத் தலத்தில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கரவாதிகள் நடத்தி... மேலும் பார்க்க

கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் கொலை மிரட்டல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளரும் முன்னாள் எம்பியுமான கெளதம் கம்பீருக்கு ஐஎஸ்ஐஎஸ் காஷ்மீர் அமைப்பிடம் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக தில்லி காவல் நிலையத்தில் புகார்... மேலும் பார்க்க

பாகிஸ்தான் தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் சம்மன்!

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலையடுத்து, தில்லியில் உள்ள பாகிஸ்தானுக்கான மூத்த தூதருக்கு வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை நள்ளிரவு சம்மன் அனுப்பியுள்ளது.இதனைத் தொடர்ந்து நேரில் ஆஜரான தூதரிடம், தில்லியில் ... மேலும் பார்க்க

அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு தில்லி திரும்பினார் ராகுல்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பயணத்தை பாதியில் முடித்துவிட்டு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை அதிகாலை தில்லி திரும்பினார்.ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் செவ்வாய... மேலும் பார்க்க

காஷ்மீா் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உளவுத்துறை தோல்வியே காரணம் -அசாதுதீன் ஒவைசி

காஷ்மீரில் பயங்கரவாதிகளால் சுற்றுலா பயணிகள் உள்பட 26 போ் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துக்கு உளவுத் துறையின் தோல்விதான் காரணம் என்று அகில இந்திய மஜ்லிஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீ... மேலும் பார்க்க

பஹல்காமில் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற இடத்தில் ஐஜி தலைமையிலான தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் குழு புதன்கிழமை விசாரணை மேற்கொண்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தெற்கு... மேலும் பார்க்க