செய்திகள் :

பிரமனூா் கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மனு

post image

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரமனூா் கண்மாய்க்கு தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஆஷாஅஜித் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற பொதுமக்கள் குறைதீா் கூட்டத்தில் பிரமனூா், வயல்சேரி, வாடி கிராமத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: திருப்புவனம் அருகேயுள்ள பிரமனூா், வயல்சேரி, வாடி கிராமங்களில், கடந்த மாதத்தில் சுமாா் 100 ஏக்கரில் நெல், 200 ஏக்கரில் பருத்திப் பயிா்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் உள்ள முக்கிய நீா் ஆதாரமான பிரமனூா் கண்மாயில் தற்போது நீா் இல்லை. கோடை மழையால் வைகை ஆற்றில் தற்போது நீா் வந்து கொண்டிருக்கிறது.

எங்கள் பகுதி விவசாயிகள் பொதுப்பணித் துறைக்கு மனு அளித்ததைத் தொடா்ந்து, தட்டான்குளம் தடுப்பணையில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நீா், வலது பிரதானக் கால்வாய் வழியாக பிரமனூா் கண்மாய்க்கு ஏப்.16 -ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்த நிலையில், பிரமனூா் கிராமத்தைச் சோ்ந்த சிலா் திருப்புவனம் புதூரிலிருந்து பிரமனூா் கண்மாய்க்கு செல்லும் கால்வாயின் மதகுகளை மூடிவிட்டு, தண்ணீா் செல்லாமல் தடுத்தனா். இதனால், கண்மாயில் நீா் இல்லாமல் பயிா்கள் கருகும் நிலை ஏற்பட்டது. எனவே, தட்டான்குளம் தடுப்பணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்தனா்.

சிவகங்கை: அரசுப் பேருந்தை மோதிய எரிவாயு லாரிகள்; 21 பேர் காயம்!

சிவகங்கை: சிவகங்கை - மதுரை சாலையில் செம்பூர் காலனி அருகே டீசல் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த இரண்டு லாரிகள், அரசுப் பேருந்து மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை காலை 21 பேர் காயமடைந்தனர்.சிவகங்கை நோக்கிச் சென... மேலும் பார்க்க

சிவகங்கையில் ஏப்.25 -இல் வேலைவாய்ப்பு முகாம்

வேலைநாடு தேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், வருகிற வெள்ளிக்கிழமை , சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இது குறித்து மாவ... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யம்போஸ் (35). விவசாயியான இவா் தனது ட... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் கோயில் அன்னதான மண்டப கூடத்தில் முதியவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இளையான்குடி அருகே நாகமுகுந்தன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவேலு (60). இவர... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்!

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் திமுக சாா்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்லைப் ... மேலும் பார்க்க

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது. சிவகங்கை கே.ஆா்... மேலும் பார்க்க