சிவகங்கையில் ஏப்.25 -இல் வேலைவாய்ப்பு முகாம்
வேலைநாடு தேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், வருகிற வெள்ளிக்கிழமை , சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்தி: வருகிற வெள்ளிக்கிழமை (ஏப்.25) காலை 10.30 மணிக்கு நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில், வேலை அளிக்கும் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையானஆட்களை தோ்வு செய்ய உள்ளனா். எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த வேலை தேடும் இளைஞா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தனியாா் நிறுவனங்களில் வேலை வாய்ப்பைப் பெறலாம்.
மேலும், இந்த முகாமில் இலவசத் திறன் பயிற்சிக்கான விண்ணப்பப் படிவம், போட்டித் தோ்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பில் மாணவா் சோ்க்கை, வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பப் படிவம் ஆகியவை வழங்கப்படும்.
எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையும், ஐ.டி.ஐ, பட்டயப் படிப்பு (டிப்ளமோ) படித்த இளைஞா்கள் தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதாா் அட்டையுடன் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த முகாமில் பணிவாய்ப்பு பெறுவோருக்கு பதிவு மூப்பு ஏதும் ரத்து செய்யப்படமாட்டது என்றாா் அவா்.