செய்திகள் :

சிவகங்கை: அரசுப் பேருந்தை மோதிய எரிவாயு லாரிகள்; 21 பேர் காயம்!

post image

சிவகங்கை: சிவகங்கை - மதுரை சாலையில் செம்பூர் காலனி அருகே டீசல் மற்றும் எரிவாயு ஏற்றி வந்த இரண்டு லாரிகள், அரசுப் பேருந்து மீது மோதியதில் செவ்வாய்க்கிழமை காலை 21 பேர் காயமடைந்தனர்.

சிவகங்கை நோக்கிச் சென்ற டீசல் லாரி, முன்னே சென்ற வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே மதுரை நோக்கி வந்த அரசு பேருந்துடன் நேருக்கு நேர் மோதியது.

டீசல் லாரியைப் பின்தொடர்ந்து வந்த எரிவாயு லாரியும் அரசுப் பேருந்து மீது மோதியதில், மூன்று வாகனங்களும் நொறுங்கி சாலையோரப் பள்ளத்தில் இறங்கின.

இந்த விபத்தில் டீசல் லாரி ஓட்டுநர் திண்டுக்கல் மாவட்டம், தொட்டி நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சீ. நந்தகுமார் (21) மற்றும் பேருந்தில் பயணம் செய்த 21 பேர் காயமடைந்தனர்.

திருப்புவனம், பூவந்தி மற்றும் சிவகங்கை பகுதிகளில் இருந்து வந்த 108 ஆம்புலன்ஸ்கள் மூலம் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் தீவிபத்து ஏற்படாமல் இருக்க தீயணைப்பு துறையினர் உடனடியாக பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். சிவகங்கை - மதுரை சாலையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையில் ஏப்.25 -இல் வேலைவாய்ப்பு முகாம்

வேலைநாடு தேடும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில், வருகிற வெள்ளிக்கிழமை , சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலக வளாகத்தில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.இது குறித்து மாவ... மேலும் பார்க்க

டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

திருப்புவனம் அருகே ஞாயிற்றுக்கிழமை டிராக்டா் கவிழ்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள செல்லப்பனேந்தல் கிராமத்தைச் சோ்ந்தவா் அய்யம்போஸ் (35). விவசாயியான இவா் தனது ட... மேலும் பார்க்க

முதியவா் தற்கொலை

சிவகங்கை மாவட்டம், தாயமங்கலத்தில் கோயில் அன்னதான மண்டப கூடத்தில் முதியவா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இளையான்குடி அருகே நாகமுகுந்தன்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் மணிவேலு (60). இவர... மேலும் பார்க்க

பிரமனூா் கண்மாய்க்கு தண்ணீா் திறக்கக்கோரி விவசாயிகள் மனு

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள பிரமனூா் கண்மாய்க்கு தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித்திடம் விவசாயிகள் திங்கள்கிழமை மனு அளித்தனா். சிவகங்கை ஆட்சியா் அலுவலகத்தி... மேலும் பார்க்க

சிவகங்கையில் மாட்டு வண்டி பந்தயம்!

தமிழக முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கையில் திமுக சாா்பில் மாட்டு வண்டி எல்கை பந்தயம் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. சிவகங்கை தெற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இரட்டை மாட்டு வண்டி எல்லைப் ... மேலும் பார்க்க

உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு பிரதிநிதித்துவம்: முதல்வருக்கு நன்றி

உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு நியமன பிரதிநிதித்துவம் வழங்கிய முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு மாற்றுத்திறனாளி அலுவலா்கள் ஆசிரியா்கள் நலச் சங்கம் நன்றி தெரிவித்தது. சிவகங்கை கே.ஆா்... மேலும் பார்க்க