செய்திகள் :

பட்ஜெட் விலையில் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ! இந்தியாவில் கிடைக்குமா?

post image

மோட்டோரோலா நிறுவனத்தின் எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன், பட்ஜெட் விலையில் நிறைவான அம்சங்களுடன் கிடைக்ககூடிய ஸ்மார்ட்போனாக உள்ளது.

இதன் சிறப்பம்சங்கள் குறித்து தகவல் வெளியான நிலையில், இந்தியாவில் தற்போது அறிமுகமாகுமா? என்ற கேள்வி பயனர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் மோட்டோரோலா நிறுவனம் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்கள், இந்திய பயனர்களைக் கவரும் வகையிலும் உள்ளது.

இந்திய சந்தைகளில் குறிப்பிடத்தகுந்த இடத்தைப் பெற்றுள்ள மோட்டோரோலா நிறுவனம் தற்போது எட்ஜ் 60 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யவுள்ளது. முதலில் அமெரிக்காவில் அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன், படிப்படியாக இந்திய சந்தைகளில் கிடைக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் குறித்து இணையத்தில் பல்வேறுவிதமான தகவல்கள் வெளியாகின்றன. ஆனால், உண்மையான சிறப்புகள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.

  • எட்ஜ் 60 ப்ரோ மாடல் ஸ்மார்ட்போன் 6.7 அங்குல திரை கொண்டது. அமோல்ட் ( AMOLED) அம்சத்துடன் பயன்படுத்துவதற்கு சுமுகமாக இருக்கும் வகையில் 144 Hz திறன் கொண்டது.

  • மீடியாடெக் டைமன்சிட்டி 8350 புராசஸருடன் 12GB செயலிகளுக்கான உள்நினைவகத்தையும் 512GB கோப்புகளுக்கான நினைவகத்தையும் கொண்டுள்ளது.

  • மோட்டோரோலாவில் மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளதைப் போன்று 5,100 mAh பேட்டரி திறன் வழங்கப்பட்டுள்ளது. 68W வேகமாக சார்ஜ் செய்யும் சிறப்பு உடையது.

புற வடிவத்தின் சிறப்பு

மற்ற ஸ்மார்ட்போன்களைப் போல் அல்லாமல், தோல் வடிவ புறத்தோற்றம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனால், பின்புறத்தில் கூடுதலாக எந்தவொரு பாதுகாப்பு கவசங்களும் தேவைப்படாது. திரையிலேயே விரல் தொடுகை சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்க்கப்படும் விலை

முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகமாகும் மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ, இந்திய சந்தையில் ரூ. 31,999-க்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படும் தேதி குறித்து எந்தவொரு தகவலையும் மோட்டோரோலா இதுவரை உறுதிப்படுத்தவில்லை. எனினும் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க | 22 நாள்கள் பேட்டரி தாங்கும் திறன்! விவோவின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

அனந்த் ராஜ் 4-வது காலாண்டு நிகர லாபம் 51% அதிகரிப்பு!

ரியல் எஸ்டேட் நிறுவனமான ஆனந்த் ராஜ் லிமிடெட், கடந்த நிதியாண்டின் 4-வது காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 51 சதவிகிதம் அதிகரித்து ரூ.118.64 கோடியாக உள்ளதாக தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு இதே காலாண்ட... மேலும் பார்க்க

டாடா கம்யூனிகேஷன்ஸ் 4வது காலாண்டு நிகர லாபம் 4 மடங்கு அதிகரிப்பு!

டாடா கம்யூனிகேஷன்ஸ் மார்ச் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் அதன் நிகர லாபம் ரூ.1,040 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதன் முந்தைய மூன்று மாதங்களை விட 4.4 மடங்கு அதிகரித்துள்ளது. அதே வேளையில் அதன் வ... மேலும் பார்க்க

நாட்டின் 3வது பெரிய நிறுவனமாக மாறிய ஹெச்டிஎஃப்சி வங்கி!

இன்றைய வர்த்தகத்தில் ஹெச்டிஎஃப்சி வங்கியின் பங்குகள் ரூ.15 லட்சம் கோடி என்ற மைல்கல்லை எட்டியதன் மூலம், நாட்டில் மூன்றாவது பெரிய இந்திய நிறுவனம் என்ற பெருமையை தட்டி சென்றது.ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்று... மேலும் பார்க்க

22 நாள்கள் பேட்டரி தாங்கும் திறன்! விவோவின் புதிய ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்!

விவோ நிறுவனம் சிறந்த பேட்டரி திறனுடன் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது. ரெட்மி நிறுவனம் நேற்று புதிய ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்த நிலையில், இன்று (ஏப். 22) விவோ நிறுவனம் அதிக நாள்கள் ப... மேலும் பார்க்க

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.85.23-ஆக முடிவு!

மும்பை : இன்றைய வர்த்தக முடிவில் அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.85.23-ஆக முடிந்தது.தொடர்ந்து வரும் அந்நிய நிதியால் சென்செக்ஸ் மற்றும் ... மேலும் பார்க்க

6-வது நாளாக உயர்ந்து முடிந்தது சென்செக்ஸ், நிஃப்டி!

மும்பை: இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி டாப் 50 பங்குகள் கொண்ட குறியீடுகள் தொடர்ந்து ஆறாவது நாளாக உயர்ந்து முடிந்தது முதலீட்டாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. காலை நேர வர்த்தகத்தி... மேலும் பார்க்க