செய்திகள் :

பிரான்ஸ், இத்தாலிக்கு 5 நாள்கள் பயணம் தொடங்கினாா் பியூஷ் கோயல்

post image

பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகளுக்கான ஐந்து நாள்கள் அரசுமுறைப் பயணத்தை மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கினாா்.

இப்பயணத்தின் முதல் கட்டமாக பிரான்ஸ் நாட்டுக்குப் புறப்பட்ட அவா், பாரீஸில் செவ்வாய்க்கிழமை (ஜூன் 3) நடைபெறும் உலக வா்த்தக அமைப்பின் அமைச்சா்கள் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளாா். 128 நாடுகள் உறுப்பினா்களாக உள்ள இந்த அமைப்பில் விவசாயம், மீன்பிடி தொழில் தொடா்பாக நிலுவையில் இருக்கும் பிரச்னைகள், முதலீட்டு வசதிக்கான சீனாவின் முன்மொழிவு, உலக வா்த்தக அமைப்பில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள், அமெரிக்காவின் முட்டுக்கட்டையால் செயல்படாத நிலையில் உள்ள மேல்முறையீட்டு அமைப்பு உள்ளிட்ட விவகாரங்களை இந்தியா முன்வைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இக்கூட்டத்தையொட்டி, அமெரிக்கா, சிங்கப்பூா், சவூதி அரேபியா, தென்கொரியா, நைஜீரியா, பிரேசில், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் அமைச்சா்களையும் சந்தித்து, பியூஷ் கோயல் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா்.

பிரான்ஸைத் தொடா்ந்து, இத்தாலிக்கு அவா் பயணிக்கவுள்ளாா். ஐரோப்பிய நாடுகளுடன் வா்த்தக ரீதியிலான இந்தியாவின் நல்லுறவுக்கு இப்பயணம் மேலும் உத்வேகமளிக்கும் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொண்டாடவே சென்றார்கள்.. சாக அல்ல.. சின்னசாமி அரங்கில் நடந்தது என்ன?

பெங்களூர்: தங்களது கிரிக்கெட் சாம்பியன்களை நேரில் காண வேண்டும் என்ற ஆவலோடு சென்ற இளைஞர்களும் இளைஞிகளும் கூட்ட நெரிசலில் சிக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், மருத்துவமனைய... மேலும் பார்க்க

கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும்: முர்மு

புது தில்லி: சுற்றுச்சூழலுக்கான ஒவ்வொரு செயலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது என்றும் கூட்டு முயற்சிகள் எதிர்கால சந்ததியினருக்கு பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்றும் குடியரசுத் தலைவர் திரௌபதி... மேலும் பார்க்க

தில்லி இல்லத்தில் "சிந்தூர்" மரக்கன்றுகளை நட்டார் பிரதமர் மோடி!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தில்லியில் தனது இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடி சிந்தூர் மரக்கன்றுகளை நடும் காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. பூமியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தி ஐ.நா... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவிலும்கூட.. பெங்களூர் கூட்ட நெரிசல் குறித்து சித்தராமையா சொன்ன ஒரு வார்த்தை!!

பெங்களூர் சின்னசாமி விளையாட்டரங்கில் நேரிட்ட கூட்ட நெரிசல் குறித்துப் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, சம்பவத்தை எந்த வகையிலும் நியாயப்படுத்திப் பேச விரும்பவில்லை, நாடு முழுவதும் பல இடங்களிலும் கூட... மேலும் பார்க்க

யோகி ஆதித்யநாத் பிறந்தநாள்: மோடி, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து!

உத்தரப் பிரதேசத்தின் முதல்வரான யோகி ஆதித்யநாத்தின் 53வது பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி மற்றும் பல அரசியல் தலைவர்கள் ... மேலும் பார்க்க

பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35,000 பேர்தான் கூட முடியும்! ஆனால் கூடியதோ..

பெங்களூர்: பெங்களூர் சின்னசாமி அரங்கில் வெறும் 35 பேர்தான் கூட முடியும் என்ற நிலையில், சுமார் 3 லட்சம் பேர் அரங்குக்குள் முண்டியடித்துக் கொண்டு உள்ளே வர முயன்றதே கூட்ட நெரிசலுக்குக் காரணம் என கூறப்படு... மேலும் பார்க்க