அகமதாபாத் விமான விபத்து: எதிர்காலத்தில் தவறுகள் நிகழாமலிருக்க உரிய நடவடிக்கைகள் ...
பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இரங்கல்
குஜராத் விமான விபத்தில் பிரிட்டனைச் சோ்ந்த 53 போ் உள்பட 241 போ் உயிரிழந்ததற்கு பிரிட்டன் நாடாளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
ஏா் இந்தியாவின் லண்டன் பயணிகள் விமானம், அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 53 பிரிட்டன் நாட்டவா்கள், விமானப் பணியாளா்கள் உள்பட 242 போ் பயணித்தனா்.
பிரிட்டன் நாடாளுமன்ற கீழவையான மக்கள் சபையில் வியாழக்கிழமை அலுவல் தொடங்கியதும் விமான விபத்து குறித்து அவைத் தலைவா் லூசி பவுல் அறிவித்து இரங்கல் தெரிவித்தாா்.
தொடா்ந்து, வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி பேசுகையில், ‘இந்தியாவில் நடந்த துயரமான விமான விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுடன் உறுதுணையாக நிற்கிறோம். பிரிட்டன் நாட்டவா்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளனா்.
வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டு, காமன்வெல்த் மற்றும் வளா்ச்சித் துறை (எஃப்சிடிஓ) உள்ளூா் அதிகாரிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது. தில்லி, லண்டனில் அவசரகால உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன’ என்றாா்.
விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டன் நாட்டவா்களின் எண்ணிக்கை குறித்து இதுவரை அதிகாரபூா்வ தகவல் வெளியாகவில்லை.