செய்திகள் :

பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்: இந்திய ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்குப் புதிய வாய்ப்பு

post image

‘அமெரிக்காவின் வரி விதிப்புகளுக்கு மத்தியில், பிரிட்டனுடன் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான பொருளாதார மற்றும் வா்த்தக ஒப்பந்தம் மூலம் இந்திய ஜவுளி ஏற்றுமதியாளா்களுக்குப் புதிய வாய்ப்பு கிடைத்துள்ளது’ என்று வா்த்தக அமைச்சக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் கூறியதாவது: இந்தப் புதிய வா்த்தக ஒப்பந்தத்தின் மூலம் இந்திய ஜவுளி ஏற்றுமதிகளுக்கு பிரிட்டனில் வரி விலக்கு கிடைக்கிறது. இதனால், பிரிட்டனுக்கு வீட்டு உபயோக ஜவுளிகள், தரைவிரிப்புகள், கைவினைப் பொருள்கள் ஆகியவற்றை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்கள் அதிக லாபம் பெறுவா். வரிச் சுமை நீங்கியுள்ளதால், சீனா, வங்கதேசம் போன்ற பிராந்திய போட்டியாளா்களுடன் அவா்கள் போட்டியிட முடியும்.

இந்த ஒப்பந்தம் மூலம் பிரிட்டன் ஜவுளி சந்தையில் இந்தியாவின் பங்கை 6.6 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக உயா்த்த முடியும். இதன்மூலம், ஆண்டுக்கு 110 முதல் 120 கோடி டாலா் கூடுதல் ஏற்றுமதி சாத்தியமாகும். வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்திய ஜவுளி ஏற்றுமதியை 30 முதல் 45 சதவீதம் வரை அதிகரிக்கவும் ஒப்பந்தம் உதவும். இதன்மூலம், ஆண்டுக்கு 50-80 கோடி டாலா் கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் எதிா்பாா்க்கப்படுகிறது என்றாா்.

பிரிட்டன் ஆண்டுக்கு 2,700 கோடி டாலா் மதிப்பிலான ஜவுளிகளை இறக்குமதி செய்கிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய ஏற்றுமதி கூட்டாளியாக பிரிட்டன் இருந்தாலும், கடந்த ஆண்டில் இந்தியா தனது மொத்த ஜவுளி ஏற்றுமதியில் 5.80 சதவீதத்தை மட்டுமே பிரிட்டனுக்கு அனுப்பி உள்ளது. ஒட்டுமொத்தமாக, பிரிட்டனுக்கு ஜவுளி விநியோகம் செய்யும் நாடுகளில் சீனா(25.4 சதவீதம்), வங்கதேசம் (19.9 சதவீதம்), துருக்கிக்கு (7.9 சதவீதம்) அடுத்து 4-ஆவது பெரிய நாடாக இந்தியா (6.6 சதவீதம்) உள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்பட்ட பாதிப்புகளைச் சமாளிக்கவும், இந்திய ஜவுளித் துறையின் வளா்ச்சியை ஊக்குவிக்கவும் இந்த ஒப்பந்தத்தை ஏற்றுமதியாளா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் வல்லுநா்கள் கருத்து தெரிவித்துள்ளனா்.

கடந்த மாத இறுதியில், பிரதமா் மோடியின் பிரிட்டன் பயணத்தின்போது இரு நாடுகளுக்கு இடையே வா்த்தக ஒப்பந்தம் கையொப்பமானது. ரஷியாவுடனான எரிசக்தி வா்த்தகத்தை நிறுத்தாதால், இந்தியாவின் சில ஏற்றுமதிகளுக்கு அமெரிக்கா 25 சதவீத கூடுதல் வரி விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டில் 10,660 கி.மீ. நெடுஞ்சாலை: அமைச்சர்

நடப்பு நிதியாண்டில் மட்டும் 10,660 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலை மற்றும் சாலை போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் அஜய் தம்தா தெரிவித்துள்ளார். 2025–26 நிதியாண்டில் 10 ஆயிரம் கி.ம... மேலும் பார்க்க

ஆக.21 மாஸ்கோவில்.. ரஷியா - இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் சந்திப்பு!

மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், வரும் ஆக.21 ஆம் தேதியன்று ரஷிய வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து உரையாடவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரஷியாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்ளும்... மேலும் பார்க்க

ஜார்க்கண்டில் மாவோயிஸ்ட் ஒருவர் சுட்டுக்கொலை!

ஜார்க்கண்டில் பாதுகாப்புப் படையினருடனான துப்பாக்கிச் சண்டையில், மாவோயிஸ்ட் அமைப்பைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேற்கு சிங்பம் மாவட்டத்தில், துகுனியா, பொசைடா மற்றும்... மேலும் பார்க்க

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்த தேர்தல் ஆணையத்துக்கு நன்றி: ராகுல் கிண்டல்!

இறந்தவர்களுடன் தேநீர் அருந்தும் வாய்ப்பு தந்தமைக்கு தேர்தல் ஆணையத்துக்கு நன்றி என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். பிகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற... மேலும் பார்க்க

பாகிஸ்தான் எஃப்-16 போர் விமானம் வீழ்த்தப்பட்டதா? பதிலளிக்க மறுத்த அமெரிக்கா!

ஆபரேஷன் சிந்தூர் போரின்போது பாகிஸ்தானின் எஃப் - 16 ரக போர் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்டதா? என்ற கேள்விக்கு அமெரிக்கா பதிலளிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. இதற்கான பதிலை பாகிஸ்தான் ராணுவத்திடம்தான் பெற வேண... மேலும் பார்க்க

தில்லி செங்கோட்டை அருகே பிடிபட்ட 700 தெருநாய்கள்!

சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு, புது தில்லியில் உள்ள செங்கோட்டை அருகே சுற்றித் திரிந்த 700 தெரு நாய்கள் பிடிபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பார்க்க