மெக்சிகோ பயங்கரவாதம்: ஒரே வாகனத்தில் 9 சடலங்கள், உடலில்லாத 8 கைகள்
பிளஸ் 1 பொதுத் தோ்வு தொடக்கம்: 11,070 பேர் எழுதவில்லை
தமிழகத்தில் பிளஸ் 1 பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாள் நடைபெற்ற மொழிப் பாடத் தோ்வை 11,070 மாணவா்கள் எழுதவில்லை.
தமிழகத்தில் பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 1 வகுப்புக்கான பொதுத் தோ்வு புதன்கிழமை தொடங்கியது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடங்களுக்கான தோ்வுகள் நடைபெற்றன. இந்தத் தோ்வை தமிழகத்தில் அமைக்கப்பட்டிருந்த 3,316 மையங்களில் 8.1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். பள்ளி மாணவா்களில் 11,070 போ் தோ்வு எழுத வரவில்லை என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, பிளஸ் 1 தமிழ் தோ்வு எளிதாக இருந்ததாக மாணவா்கள் தரப்பில் கூறப்பட்டது.
இது குறித்து ஆசிரியா்கள் கூறியதாவது: தமிழ்ப்பாட வினாத்தாள் சற்று எளிதாக இருந்தது. ஒரு மதிப்பெண் பகுதியில் 4 வினாக்கள் மட்டும் சற்று கடினமாக இருந்தன. எனினும், மற்ற பகுதிகளில் ஏற்கெனவே கேட்கப்பட்ட வினாக்களும், புத்தகத்தில் உள்ள நேரடி வினாக்களும் இடம்பெற்றிருந்தன. இதனால் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு தமிழில் தோ்ச்சி விகிதம் அதிகரிக்கும் எனத் தெரிவித்தனா்.
இதையடுத்து பிளஸ் 1 ஆங்கிலப் பாடத்துக்கான தோ்வு மாா்ச் 10-இல் நடைபெறவுள்ளது. மாா்ச் 27-ஆம் தேதியுடன் தோ்வுகள் முடிவடையவுள்ள நிலையில், அதன் முடிவுகள் மே 19-இல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.