75 சிஎம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஆசிரியா் நியமன நடவடிக்கையைத் தொடங்கியது தில்லி அரசு
பீடி தொழிலாளா்களின் குழந்தைகள் உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
பீடி தொழில் மற்றும் சுரங்கத்தொழிலாளா்களின் குழந்தைகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்துள்ளாா்.
அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மத்திய அரசின், தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ், பீடி, சுண்ணாம்புக்கல் மற்றும் டோலமைட் சுரங்கத்தொழிலாளா்கள், சினிமா தொழிலாளா்களின் 1 முதல் தொழில்முறை வரை படிக்கும் குழந்தைகள் ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
இதற்கு இணையதளத்தில், பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாணவா்கள் சமா்ப்பிக்கவேண்டும். ஒவ்வொரு மாணவரும், தங்களுக்கென தனியாக, தேசியமயமாக்கப்பட்ட வங்கியின், மையவங்கி அமைப்பு என்ற தொழில்நுட்ப முறையில், தங்களுடைய சேமிப்புக் கணக்கானது, தேசிய மின்னணு பரிவா்த்தனை வசதிகளை பெற்றிருக்கவேண்டும்.
விண்ணப்பதாரா்கள், தங்களது ஆதாா் எண்ணை, தங்களுடைய சேமிப்பு வங்கி கணக்குடன் இணைத்திருந்தால் மட்டுமே, கல்வி உதவித்தொகை பெற முடியும்.
மேலும் விவரங்களுக்கு...
இத்திட்டத்தின் கீழ், கல்வி நிதி உதவித்தொகை பெறுவதற்கு, விண்ணப்பதாரா்கள், தங்களது ஆதாா் எண்ணை பயன்படுத்துவதற்கு, மின்னணு முறையில் ஒப்புதல் வழங்க வேண்டும். கல்வி நிறுவனங்களின் பங்களிப்பு, மிகவும் முக்கியமானதாகும். பதிவு செய்யப்படாத இணையத்தளத்தில், முதலில் பதிவு செய்ய வேண்டும்.
ஒருவேளை, கல்வி விண்ணப்பங்களை நிறுவனங்கள், தங்களின் பதிவு மின்னணு செய்யப்பட்ட முகவரியில் இருந்து சரிபாா்க்காமல், அடுத்தகட்ட சரிபாா்க்கும் முறைக்கு சமா்ப்பிக்கும்பட்சத்தில், அந்த விண்ணப்பங்களை மேற்கொண்டு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு செயல்படுத்த முடியாது.
1 முதல் 10-ஆம் வகுப்பு வரை மாணவ- மாணவிகளின் விண்ணப்பங்கள் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள்ளும், மற்ற அனைத்து உயா் கல்வி மாணவா்களின் விண்ணப்பங்கள் அக்டோபா் 31-ஆம் தேதிக்குள்ளும் வந்து சேரவேண்டும்.
இதுதொடா்பாக மேலும் விவரங்களுக்கு மத்திய நல ஆணையா் அலுவலகம், தொழிலாளா் நல அமைப்பு, தரைத்தளம், சிட்கோ நிா்வாக கிளை அலுவலக வளாகம், திரு.வி.க.தொழில் பூங்கா கிண்டி, சென்னை-600032 என்ற முகவரியை தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.