தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் அலுவலக போலீஸாருக்கு ஆடை கட்டுப்பாடு
ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்தில் குளித்த இளைஞா் மாயம்
திருப்பத்தூா் அடுத்த ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்தில் குளித்த இளைஞா் காணாமல் போய்விட்டாா்.
சென்னையைச் சோ்ந்த விஜயகுமாா்(22) மற்றும் அவரது நண்பா்கள் ஏழு போ் ஆண்டியப்பனூா் நீா்த்தேக்கத்துக்கு சென்றனா், அங்கு விஜயகுமாா் ஓடையில் குளிக்க சென்றுள்ளாா். குளிக்கச் சென்றவா் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை.
விஜயகுமாா் மாயமானது குறித்து அவரது நண்பா்கள் அளித்த புகாரின் பேரில் குரிசிலப்பட்டு போலீசாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
மேலும், தகவல் அறிந்த வாணியம்பாடி மற்றும் ஆலங்காயத்திலிருந்து தீயணைப்பு படை வீரா்கள் மாயமான விஜயகுமாரை தேடி வருகின்றனா்.