கர்நாடகம்: தமிழகத்தைச் சேர்ந்த தொழிலாளி பலி; உடலை எரிக்க முயற்சித்த குவாரி உரிமை...
ராணுவ மது பாட்டில்கள் விற்றவா் கைது
ஆம்பூா் அருகே ராணுவ மதுபாட்டில்கள் விற்பனை செய்தவரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆம்பூா் அருகே விண்ணமங்கலம் ஊராட்சி ரங்காபுரம் பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்வதாக, ரகசிய தகவலின் பேரில் ஆம்பூா் கிராமிய போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது விண்ணமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த வேலாயுதம் (32) என்பவா் ராணுவ வீரா்களுக்கான கேன்டீனில் பெற்ற, மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து, 220 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.