செய்திகள் :

புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் 86 வயதில் காலமானார்!

post image

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரர் காலமானார்.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற முன்னாள் டென்னிஸ் வீரரும், விளையாட்டு வர்ணனையாளருமான ஃபிரெட் ஸ்டோல், 86 வயதில் இன்று (மார்ச் 6) மரணமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டின் சிட்னி நகரத்தில் பிறந்து 1960களில் நட்சத்திர டென்னிஸ் வீரராக அறியப்பட்ட ஃபிரெட்டின் மரணத்திற்கான காரணம் குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், அவரது மரணம் குறித்து டென்னிஸ் ஆஸ்திரேலியாவின் செயல் தலைவர் க்ராய்க் டில்லே கூறியதாவது, டென்னிஸ் விளையாட்டு வீரராகவும் வர்ணனையாளராகவும் ஃபிரெட் ஸ்டொல் ஓர் முக்கிய புள்ளியாக அறியப்படுவார் எனவும் அவரது சாதனைகளும், டென்னிஸ் விளையாட்டின் மீதான அவரது தாக்கமும் என்றென்றும் நிலைத்திருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை!

ஃபிரெட் ஸ்டோல் 86 வயதில் காலமானார்

மேலும், ஆஸ்திரேலியாவின் டேவிஸ் கோப்பை அணியின் நட்சத்திர விரரான ஃபிரெட், வீரராக ஓய்வு பெற்ற பின்னர், பயிற்சியாளராகவும், கூர்மையான வர்ணனையாளராகவும் டென்னிஸ் விளையாட்டுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளார் என்று அவர் புகழாரம் சூட்டியுள்ளார்.

முன்னதாக, ஃபிரெட் 1962-69 வரையிலான கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் 10 முறை பட்டங்களை வென்றுள்ளார். மேலும், 7 முறை மிக்ஸ்ட் டபுல்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார்.

ஃபிரெட் கடந்த 1965 பிரெஞ்சு ஓபன் போட்டியில் டோனி ரோச்சை வீழ்த்தி பட்டத்தை வென்றார். பின்னர், 1966 ஆம் ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் ஜான் நியூகோம்பை வீழ்த்தி, நம்பர் 1 தரவரிசையில் இடம் பிடித்தார்.

இந்நிலையில், விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் ஆஸ்திரேலியாவிலிருந்து அமெரிக்காவிற்கு குடியேறிய ஃபிரெட் அவரது மனைவி, மகன் மற்றும் இரு மகள்களுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அவரது மகனான சாண்டன் என்பவரும் முன்னாள் டென்னிஸ் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டக் கல்லூரி காவலாளியைக் கடத்திய பாகிஸ்தான் பாதுகாப்புப் படை?

பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தின் சட்டக் கல்லூரியின் காவலாளியை அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. பலோசிஸ்தானின் சங்காபாத் பகுதியைச் சேர்ந்தவர் சயீத் பலோச், இவர் பல ஆண்... மேலும் பார்க்க

கோல்வாக்கரின் புத்தகம் சிவாஜியை இழிப்படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது புகார்!

மகாராஷ்டிரத்தில் கோல்வாக்கரின் புத்தகம் சத்ரபதி சிவாஜியை இழிவுப் படுத்தியதாகக் கூறும் சமூக ஊடகக் கணக்குகளின் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென புகாரளிக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ்.எஸ். அமைப்ப... மேலும் பார்க்க

கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வரும் செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும்: காங்கிரஸ் தலைவர்

ஜோர்டான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தாயகம் கொண்டு வருவதற்கான செலவை மத்திய அரசு ஏற்க வேண்டும் என கேரள சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார். திருவணந்தப்புரத்தின் தும்... மேலும் பார்க்க

51 புதிய வாகனங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா்!

தமிழகத்தில் வருவாய்த் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.4.58 கோடி மதிப்பீட்டிலான 51 புதிய வாகனங்களை பயன்பாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.வருவாய்த்துறை, மாநிலத்தின் நிர... மேலும் பார்க்க

பயிற்சியில் தவறுதலாக மக்கள் மீது குண்டுகள் வீசிய போர் விமானங்கள்! 15 பேர் படுகாயம்!

தென் கொரியா நாட்டில் பயிற்சியில் ஈடுபட்ட போர் விமானங்கள் தவறுதலாக மக்கள் குடியிருக்கும் பகுதியில் குண்டுகள் வீசியதில் 15 பேர் படுகாயமடைந்துள்ளனர். வட கொரியா நாட்டுடனான எல்லையில் போசியோன் நகரத்தின் அரு... மேலும் பார்க்க

6 பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை வழங்கி முதல்வர் ஸ்டாலின் சிறப்பிப்பு

சென்னை: ஓவியம், சிற்பக் கலையில் சாதனை படைத்த ஆறு பேருக்கு கலைச் செம்மல் விருதுகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கி சிறப்பித்தார்.தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் மரபுவழி ... மேலும் பார்க்க