செய்திகள் :

புதிய சீரியல் வருகை: பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!

post image

விஜய் தொலைக்காட்சியில் புதிய சீரியலின் வருகையால் பிரபல தொடர்களின் ஒளிபரப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.

சின்ன திரையில் ஒளிபரப்பப்படும் தொடர்களைப் பார்ப்பதற்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களை இளைய தலைமுறையினர் அதிகம் விரும்பி பார்க்கின்றனர்.

சிறகடிக்க ஆசை, ஐய்யனார் துணை உள்ளிட்ட தொடர்கள் டிஆர்பியில் முன்னணியில் உள்ளது.

நீ நான் காதல் தொடர் நிறைவடையவுள்ள நிலையில், இத்தொடர் ஒளிபரப்பாகும் மாலை6 மணிக்கு ஆஹா கல்யாணம் தொடர் ஒளிபரப்பாகவுள்ளது.

அதேபோல் இரவு 10 மணிக்கு சிந்து பைரவி தொடர் ஒளிபரப்பாகி வந்த நிலையில், இத்தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது

மகாநதி தொடர் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த நிலையில், இத்தொடர் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

புதிய தொடரான பூங்காற்றுத் திரும்புமா தொடர் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.

வரும் ஏப். 28 ஆம் தேதி இந்த புதிய நேரத்தின்படி தொடர்கள் ஒளிபரப்பு செய்யப்படும் என்று தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிக்க: டிஆர்பியில் முதல்முறை நடந்த மாற்றம்! சிறகடிக்க ஆசை தொடருக்கு வரவேற்பு!

தினப்பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.ஏப்ரல் 21 (திங்கள் கிழமை)மேஷம்:கிரகநிலை:தைரிய ஸ்தானத்தில் ராஹூ - பஞ்சம ஸ்தானத்தில் சந... மேலும் பார்க்க

தில்லி முஸ்தபாஃபாத்தில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளானது - புகைப்படங்கள்

இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுவதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.தேசிய பேரிடர் மீட்புப் படை, தில்லி காவல்துறை மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்புப் பணிகளை மேற்கொ... மேலும் பார்க்க

பூஜாவின் ஆட்டத்திற்கு போட்டியே இல்லை!

நடிகை பூஜா ஹெக்டேவின் நடன அசைவுகள் தொடர்ந்து இணையத்தைக் கலக்கி வருகிறது. கமர்சியல் திரைப்படங்களில் நடிப்பதற்கான இடம் நடிகைகளுக்கு அபூர்வமாகவே அமைகின்றன. பெரும்பாலும், உடல்மொழியிலோ அல்லது நடனத்திலேயோ ர... மேலும் பார்க்க