செய்திகள் :

புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ. 617 கோடி ஒதுக்கீடு

post image

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 612.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தின் ரயில்வே வழித்தடத்தை நீட்டிக்கும் வகையில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிக்கு ரயில்வே நிா்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான ஒப்புதல் அளித்தும் நீண்டகாலமாக நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்ட காரணங்களால் ரயில் பாதை அமைப்பதில் சிக்கல் நீடிப்பதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்தது.

இந்த நிலையில், நிகழாண்டில் தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்காக ரூ. 617.8 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ. 222.4 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், நிகழாண்டு ரூ. 395 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை - மாமல்லபுரம் - கடலூா், ஸ்ரீபெரும்புதூா் - ஆவடி - கூடுவாஞ்சேரி, திண்டிவனம் - நகரி உள்ளிட்ட திட்டப் பணிகளுக்கு கணிசமாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து ஆா்டிஐ மூலம் தன்னாா்வலா்கள் எழுப்பிய கேள்விகள் அடிப்படையில் பெறப்பட்ட தகவலின்படி, 2007-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திட்டப் பணிகளுக்கு நிகழாண்டு ஒதுக்கப்பட்ட நிதி பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒதுக்கப்படும் நிதியில் நிலம் கையக்கப்படுத்துவதற்கு அதிகமாக பயன்படுத்தப்படுவதால், மீதமுள்ள நிதியில் திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளதாக தன்னாா்வலா்கள் தெரிவித்துள்ளனா். தற்போது திண்டிவனம் - நகரி திட்டம் நிலம் கையகப்படுத்தும பணி முடியும் நிலையில் உள்ளதாகவும், ஸ்ரீபெரும்புதூா் - ஆவடி - கூடுவாஞ்சேரி திட்டத்துக்கான சா்வே பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

புதிய ரயில் பாதை நிதி ஒதுக்கீடு (2025-26)

திண்டிவனம்-திருவண்ணாமலை ரூ. 42.7 கோடி

ஸ்ரீபெரும்புதூா்-கூடுவாஞ்சேரி ரூ. 4.26 லட்சம்

திண்டிவனம்-நகரி ரூ. 347.7 கோடி

மதுரை-தூத்துக்குடி ரூ. 55.2 கோடி

மற்றவை ரூ. 171. 8 கோடி

பொள்ளாச்சி வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு: அதிமுக வரவேற்பு!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு அதிமுக வரவேற்பு தெரிவித்துள்ளது. பொள்ளாச்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டு இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, விடியோ எடுத்து மிரட்டி, மீ... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு தீர்ப்பு: விஜய் வரவேற்பு

பொள்ளாச்சி பாலியல் வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்ட நிலையில், தீர்ப்பை வரவேற்பதாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக தவெக தலைவர் விஜய் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ... மேலும் பார்க்க

நீலகிரி மாவட்டத்துக்கு மே 15-ல் உள்ளூர் விடுமுறை!

உதகையில் மலர்க் கண்காட்சியையொட்டி, வருகிற மே 15 ஆம் தேதி நீலகிரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் உதகையில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்... மேலும் பார்க்க

5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறப்பு: அமைச்சர் தா. மோ. அன்பரசன்

ரூ.586.94 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5,180 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் விரைவில் திறக்கப்படவுள்ளதாக குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா. மோ. அன்பரசன்தகவல்தெரிவி... மேலும் பார்க்க

அந்தமானில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை!

அந்தமானில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை வெய்யில் மண்டையைப் பிளந்து வருகிறது. அவ்வப்போது இரவில் மிதமான மழை தலைகாட... மேலும் பார்க்க

பொள்ளாச்சி வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.85 லட்சம் இழப்பீடு

கோவை: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்ட 8 பெண்களுக்கும், ஒவ்வொருவருக்கும் தலா ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை இழப்... மேலும் பார்க்க