செய்திகள் :

புதுச்சேரியை உலுக்கிய மருந்து கொள்முதல் முறைகேடு - சிக்கிய அதிகாரிகள்; சிக்கலில் ஆட்சியாளர்கள்

post image

புதுச்சேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமுதாய நலவழி மையங்களில் கடந்த 2018-19 ஆண்டு கர்ப்பிணிகளுக்கும், குழந்தைகளுக்கும் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டன.

ஆனால் அந்த மாத்திரைகளை சாப்பிட்ட கர்ப்பினிகளுக்கும், குழந்தைகளுக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அதனால் மருத்துவமனைகளில் இருந்து அந்த மருந்துகளை திரும்பப் பெற்று ஆய்வு செய்தபோது, அவை தரமற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில், அதிர வைக்கும் தகவல்கள் வெளியாகின. கர்ப்பிணிகள், குழந்தைகள் மற்றும் பள்ளி சிறுவர்களுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்குவதற்காக, சுகாதாரத்துறை சார்பில் டெண்டர் கோரப்பட்டது.

கைதான புதுச்சேரி சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர்கள்

அதற்கு பல்வேறு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பித்தன. அப்போது அங்கு பணியாற்றிய தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் (NRHM - National Rural Health Mission) மருந்தாளுநர் நடராஜன் என்பவர், மற்ற நிறுவனங்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களையும், அதில் குறிப்பிட்டிருந்த தொகைகளையும் விதிகளை மீறி ரகசியமாகப் பார்த்தார்.

அதையடுத்து அவருடைய மனைவி பெயரில் சாய்ராம் மற்றும் பத்மஜோதி ஏஜென்சி என்ற நிறுவனங்களை உருவாக்கி, ரூ.2.4 கோடி குறிப்பிட்டு விண்ணப்பித்தார்.

மற்ற நிறுவனங்கள் ரூ.2.5 மற்றும் அதற்கு மேலான தொகைகளைக் குறிப்பிட்டு டெண்டருக்கு விண்ணப்பித்திருந்தன. குறைவான விலையைக் குறிப்பிட்டிருந்த நடராஜனுக்கு அந்த டெண்டர் கிடைத்தது.

இந்த உண்மைகள் தெரிந்ததும், நடராஜன் அப்போது பணிநீக்கம் செய்யப்பட்டார். இந்த மோசடி குறித்து சுகாதாரத்துறையின் சிறப்புப் பணி அதிகாரி ஜோஸ்பின் சித்ரா, லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாரளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய்த லஞ்ச ஒழிப்புப் போலீஸார், தேசிய ஊரக சுகாதார இயக்கத்தின் மருந்தாளுநர் நடராஜன் உள்ளிட்ட ஊழியர்கள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தொடர்ந்து நடராஜனை  கைது செய்த போலீஸார், மாத்திரைகள் கொள்முதல் பிரிவில் இருந்த ரூ.2.4 கோடி மதிப்பிலான தரமற்ற மருந்துகளை பறிமுதல் செய்தனர். அத்துடன் இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் அனைத்தும், இந்திய தணிக்கைக் குழுவுக்கும் அனுப்பப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்

இதற்கிடையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நடராஜன், தரமற்ற மருந்து கொள்முதல் வழக்கில் அதிகாரிகள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மோசடியில் தொடர்புடைய அனைவரையும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

அதனடிப்படையில் விசாரணையில் இறங்கிய லஞ்ச ஒழிப்புப் போலீஸார், சுகாதாரத்துறையின் முன்னாள் இயக்குநர்கள் டாக்டர் ராமன், டாக்டர் மோகன் குமார், முன்னாள் துணை இயக்குநர் டாக்டர் அல்லிராணி, நடராஜனின் மனைவி புனிதா, நந்தகுமார், மோகன் உள்ளிட்ட ஆறு பேரை அதிரடியாக கைது செய்திருக்கின்றனர்.

அத்துடன், இதில் தொடர்புடைய அரசியல் புள்ளிகளையும் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் குறி வைத்திருப்பதால், கலக்கத்தில் இருக்கின்றனர் முன்னாள், இந்நாள் ஆட்சியாளர்கள்.

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பா... மேலும் பார்க்க

'விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!' - உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க