செய்திகள் :

புதுச்சேரி: ``நிலம், ஒப்புதல் உடனே தருகிறோம், முதலீடு செய்யுங்கள்!'' - தொழில் துவங்க ஆளுநர் அழைப்பு

post image

புதுச்சேரியில் நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின், இரண்டாவது தென்னிந்திய கவுன்சில் கூட்டத்தை ஆளுநர் கைலாஷ்நாதன் துவக்கி வைத்தார்.

இந்திய தொழில் கூட்டமைப்பின் தென்மண்டல தலைவர் தாமஸ் ஜான் முத்தூட் மற்றும் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

அப்போது பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன், ``புவியியல் ரீதியாக புதுச்சேரி சிறிய மாநிலம். அதேசமயம் இதன் கலாசாரம், வலுவான கல்வி நிறுவனங்கள், அமைதியான சூழல், தொழில்துறை முதலீட்டுக்கான முக்கிய இடமாக இருக்கிறது.

பிரதமர் மோடி துவங்கிய மேக் இன் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, கேதி சக்தி போன்ற முதன்மை திட்டங்கள் நாடு முழுவதும் தொழில் துறையை எழுச்சிபெற வைத்திருக்கிறது.

புதுச்சேரி
புதுச்சேரி அரசு

உலக அளவில் நிச்சயமற்ற சூழல் நிலவியபோது கூட, அந்நிய முதலீடு மற்றும் ஏற்றுமதியில் வளர்ச்சியை கண்டோம்.

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள துறைமுகங்கள், கடல் சார்ந்த தொழில்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன. புதுச்சேரியில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்வதற்கு வசதியாக, விமான சேவைகள் தொடங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

தொழில்துறை நலனுக்காக கரசானூரில் 750 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. அதனால் புதுச்சேரியில் முதலீடு செய்ய வருமாறு முன்னணி தொழிலதிபர்களை கேட்டுக் கொள்கிறேன். புதுச்சேரியில் தொழில் துவங்குவதற்கான அனைத்து ஒப்புதல்களும் உடனடியாக வழங்கப்படும்” என்றார்.

Israel Vs Iran: ``Operation True Promise 3-இஸ்ரேலின் 6 இடங்களை குறிவைத்து தாக்கியிருக்கிறோம்"- ஈரான்

கடந்த சில நாள்களாக, 'ஈரானில் அணு ஆயுத தயாரிப்பு' என்ற பேச்சு அடிப்பட்டு வந்தது. இதை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கிடையில் ஜூன் 12 அன்று ஈரானின் அணுசக்தி தளங்கள் மற்றும் இர... மேலும் பார்க்க

``வரும் தேர்தலில் திருச்சியில் போட்டி; நடிகர் விஜய் மனசு..'' - திருநாவுக்கரசர் தடாலடி

ராகுல் காந்தி பிறந்த நாள்: வேலைவாய்ப்பு முகாம்நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எம்.பி-யின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் திருச்சி மாநகர் மாவட்ட அலுவலகமான அருணாச... மேலும் பார்க்க

`திருமாவளவன் பேரணியில் ஹெலிகாப்டரில் பூ தூவ அனுமதி மறுப்பு' - காவல்துறை சொன்ன காரணம்

திருச்சி மாநகரில் இன்று மாலை விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக, 'மதசார்பின்மை காப்போம்' என்ற தலைப்பில் பிரம்மாண்ட பேரணி நடத்த உள்ளதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.டி.வி.எஸ் டோல்கேட் பக... மேலும் பார்க்க

Doctor Vikatan: இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்பதை அறிய ECG டெஸ்ட் மட்டுமே போதுமா?

Doctor Vikatan: ஒருவரின் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டறிய இசிஜி டெஸ்ட் மட்டுமே போதுமானதா, ரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை அதில் கண்டறிய முடியுமா, ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாருக்குத்தேவைப... மேலும் பார்க்க

தெருவோர மருந்தகங்கள்.. நாம் மறந்த மருத்துவச்செடிகளின் பலன்கள்!

மருத்துவம் வளர்ச்சி அடையாத காலங்களில், நம் முன்னோர்கள் பல வகையான நோய்களை மூலிகைகளை வைத்தே குணப்படுத்திக் கொண்டனர். அந்தச் செடிகள் எல்லாம் சாதாரணமாக நம் வீட்டு கொல்லைப்புறங்களிலும், தெருவோரங்களிலுமே இர... மேலும் பார்க்க

``அடுத்தவர் சாப்பாட்டை எடுத்து மற்றவர்களுக்கு..'' -திமுக எம்எல்ஏ விமர்சனம்; கே.என்.நேருவின் பதில்

திருச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு (DISHA) கூட்டம் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நட... மேலும் பார்க்க